உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை அலுவலகத்தில் ஓட்டுநர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

திருப்பூர் மண்டலம், கோவை மண்டல இணை இயக்குநர், உள்ளாட்சி நிதித் தணிக்கை துறை அலுவலகத்தில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட ஒரு ஈப்பு ஓட்டுநர் பணியிடத்திற்கு தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பொதுபோட்டி- முன்னுரிமை பெற்றவர் என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ள இப்பதவிக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி எட்டாம்வகுப்பு தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.

தொழில்நுட்ப தகுதியாக இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் குறைந்தது 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக மலைப்பிரதேசத்தில் ஈப்பு வாகனம் ஓட்டிய அனுபவம் தேவை.

இப்பதவிக்கான வயது வரம்பு 1.7.2016 அன்று தாழ்த்தப்பட்ட வகுப்பினர் குறைந்தபட்சம் 18, அதிகபட்சமாக 35, பழங்குடியினர் குறைந்தபட்சம் 18- அதிகபட்சமாக 35, மிகவும் பிற்படுத்தப்பட்டவர் குறைந்தபட்சம் 18- அதிகபட்சம் 32, பிற்படுத்தப்பட்டவர் 18 முதல் 32 வயது வரை இருக்க வேண்டும். இது தவிர மேலும் பிறபிரிவனர்களுக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

விண்ணப்பதாரர் கோவை மாவட்டத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். இப்பதவிக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் மற்றும் உரிய சான்றிதழ்களுடன் வரும் 31.3.2017ம் தேதிக்குள் மண்டல இணை இயக்குநர், உள்ளாச்சி நிதித் தணிக்கை துறை, 4-வது தளம், மாவட்ட நூலக ஆணைக்குழு கட்டிடம், டவுன்ஹால், கோவை- 641001 என்ற முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...