ஒரு வார காலத்திற்குள் ரேசன் பொருட்கள் கிடைக்காவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும்- தமிழிசை சவுந்தரராஜன்

ஒரு வார காலத்திற்குள் முறையாக ரேசன் பொருட்கள் கிடைக்கவில்லை எனில் பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பா ஜ க மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன் கூறுகையில், தமிழகத்தில் பிரதான பிரச்சனையான குடிநீர் பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட்வரியை உயர்த்தி இருப்பதால், பேருந்து கட்டணம், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்து உள்ளது. தமிழகத்தில் உள்ள பிரச்சனைகளைத் தீர்க்க தமிழக அரசிடம் நிர்வாக திறமை இல்லை.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுதல் மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்து சென்னையில் வருகின்ற 16-ம் தேதி நடைபெறும் ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் வேலைகள் ஆரம்பிக்கும் முன்னரே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையம் ஆரம்ப நிலையில் இருந்து கண்காணித்து தேர்தல் நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.

மேலும், ஒரு பலமும் இல்லாத மக்கள் நலக்கூட்டணிக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் எதற்காக அழைப்பு விடுத்தார் ?. என கேள்வி எழுப்பிய அவர், அ தி மு க விற்கு மாற்று தி மு க கிடையாது என தெரிவித்தார்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் முத்து கிருஷ்ணன் தற்கொலை தொடர்பாக தீவிரமாக விசாரிக்க வேண்டுமெனவும், வட மாநிலங்களுக்கு கல்வி பயில செல்லும் தமிழக மாணவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். 

மேலும், ஒரு வார காலத்திற்குள் முறையாக ரேசன் பொருட்கள் கிடைக்கவில்லை எனில் பா ஜ க மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தும் என தமிழிசை சவுந்திரராசன் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...