நிலத்திற்கு இழப்பீடு கேட்டு 29வது நாளாக தாராபுரத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்..!!

தாராபுரம் நல்லதங்காள் ஓடை நீர் தேக்க அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் முழு இழப்பீடு தொகை கேட்டு 29-ஆவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.



திருப்பூர்: தமிழர் முன்னணி இயக்கப் பொதுச் செயலாளர் இமயம் சரவணன் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்து விவசாயிகளை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த பொன்னிவாடி கிராமத்தில் உள்ள நல்லதங்காள் ஓடை நீர்த்த காணிக்கை கட்டுமான பணிகளுக்காக விவசாயிகளிடமிருந்து 750 ஏக்கர் நிலம் பொதுப்பணித்துறை அதிகாரிகளால் கடந்த 1997 ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது. 2000 ஆம் ஆண்டு அணை கட்டுமான பணிகளை தொடங்கினர்.

அப்போது விவசாயிகளிடம் அணை கட்டுவதற்காக கையகப்படுத்தப்பட்ட விவசாய விளை நிலங்களுக்கு அதிகபட்ச இழப்பீடு தொகை வழங்குவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் தெரிவித்து நிலத்தைப் பெற்றுக் கொண்டனர்.

ஆனால் விவசாயிகள் கூறியவாறு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்கவில்லை. இழப்பீட்டுத் தொகை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 2017 ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரையின்படி இழப்பீட்டுத் தொகை வட்டியுடன் சேர்த்து கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 ஆண்டுகள் ஆகியும் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை.



இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலர் இழப்பீட்டுத் தொகை கிடைக்காமலே இறந்துவிட்டனர். இருப்பினும் தற்போது உள்ள 150 விவசாயிகள் கோனேரிப்பட்டி பகுதியில் கடந்த 29 வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



நேற்று 29-வது நாள் தொடர் காத்திருக்கு போராட்டத்தில் விவசாயிகளுடன் தமிழர் முன்னணி இயக்க பொதுச்செயலாளர் இமயம் சரவணன் விவசாயிகளுடன் கலந்து கொண்டு உரையாற்றிய பின்னர் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...