கோவையில் மது போதையில் கணவனை கட்டையால் அடித்துக் கொன்ற மூதாட்டி கைது..!!

கோவையில் மது குடிக்கும் போது கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில் கணவனை கட்டையால் அடித்தே கொன்ற மூதாட்டியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கணவன் மனைவி இருவரும் அமர்ந்து மது குடிக்கும்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமனைந்த மூதாட்டி கணவனை கட்டையால் அடித்து கொன்றார்.

கோவை ராமநாதபுரம் சுங்கம் பைபாஸ் ரோடு, தியாகி சிவராம் நகரை சேர்ந்தவர் லோகநாதன், 75. இவர் நேற்று முன்தினம் இரவு, வீட்டில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து வந்த ராமநாதபுரம் போலீசார் விசாரனை நடத்தினர். இதில்லோகநாதனை, அவரது மனைவி தெய்வானை மரக்கட்டையால் அடித்து, கொலை செய்தது தெரிந்தது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட தெய்வானை, போலீசாரிடம் கூறியதாவது: எனது கணவர் லோகநாதனுக்கு வேலை இல்லை. நான் வீட்டு வேலைகளுக்கு சென்று வந்தேன். மகன் மணிகண்டன் செல்வபுரத்தில் குடியிருந்து வருகிறார். எங்களுக்கு மதுப்பழக்கம் உள்ளது.

நேற்று முன்தினம் இருவரும், வீட்டில் மது குடித்தோம். போதையில் தகராறு ஏற்பட்டது. அப்போது எனது கணவர், என்னை கைகளால் தாக்கினார். பதிலுக்கு, நான் வீட்டில் இருந்த மரக்கட்டையை எடுத்து தாக்கினேன். அவர் பலத்த காயம் அடைந்து, உடனே இறந்து விட்டார் என போலீசாரிடம் தெய்வானை கூறினார். இதனையடுத்து தெய்வானையை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...