இம்மானுவேல் சேகரனாரின் 66ஆம் ஆண்டு குருபூஜை விழா! தாராபுரத்தில் அனுசரிப்பு.!

தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 66ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி தாராபுரத்தில் அண்ணா சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு தேவேந்திரகுல வேளாளர் உறவின் முறையினர் சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.



திருப்பூர்: தியாகி இம்மானுவேல் சேகரனாரின் நினைவுநாளையொட்டி, தாளக்கரை கிராமத்தில் 50 க்கும் மேற்பட்ட இளைஞரர்கள் மது அருந்தமாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவரும், "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தில் கலந்துகொண்டு சிறை சென்றவரும், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய அரசியல் தலைவருமான சுதந்திரப் போராட்டத் தியாகி இம்மானுவேல் சேகரனின் 66வது நினைவு நாள் செப்டம்பர் 11ஆம்தேதி இன்று அனுசரிக்கப்படுகிறது.



அதன் ஒரு பகுதியாக தாராபுரத்தில் தியாகி இம்மானுவேல் சேகரனின் 66 வது நினைவு தினத்தையொட்டி அண்ணா சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு தேவேந்திரகுல வேளாளர் உறவின் முறையினர் சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.



இந்தவிழாவிற்கு ஒருங்கிணைப்பாளர் தியாகராஜ சோழன் தலைமை தாங்கினார். தாராபுரம் மேற்கு தெரு சீராம்பாளையம், வீராட்சி மங்கலம், தாவாய்பட்டிணம், கரையூர், ஆகிய இடங்களிலும் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தாளக்கரை கிராமத்தில் 50 க்கும் மேற்பட்ட இளைஞரர்கள் மது அருந்தமாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...