இம்மானுவேல் சேகரனாரின் 66ஆம் ஆண்டு குருபூஜை விழா! தாராபுரத்தில் அனுசரிப்பு.!

தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 66ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி தாராபுரத்தில் அண்ணா சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு தேவேந்திரகுல வேளாளர் உறவின் முறையினர் சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.



திருப்பூர்: தியாகி இம்மானுவேல் சேகரனாரின் நினைவுநாளையொட்டி, தாளக்கரை கிராமத்தில் 50 க்கும் மேற்பட்ட இளைஞரர்கள் மது அருந்தமாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவரும், "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தில் கலந்துகொண்டு சிறை சென்றவரும், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய அரசியல் தலைவருமான சுதந்திரப் போராட்டத் தியாகி இம்மானுவேல் சேகரனின் 66வது நினைவு நாள் செப்டம்பர் 11ஆம்தேதி இன்று அனுசரிக்கப்படுகிறது.



அதன் ஒரு பகுதியாக தாராபுரத்தில் தியாகி இம்மானுவேல் சேகரனின் 66 வது நினைவு தினத்தையொட்டி அண்ணா சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு தேவேந்திரகுல வேளாளர் உறவின் முறையினர் சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.



இந்தவிழாவிற்கு ஒருங்கிணைப்பாளர் தியாகராஜ சோழன் தலைமை தாங்கினார். தாராபுரம் மேற்கு தெரு சீராம்பாளையம், வீராட்சி மங்கலம், தாவாய்பட்டிணம், கரையூர், ஆகிய இடங்களிலும் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தாளக்கரை கிராமத்தில் 50 க்கும் மேற்பட்ட இளைஞரர்கள் மது அருந்தமாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Newsletter

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...