உடுமலை அருகே இலவச மருத்துவ ஆலோசனை முகாம் - ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு!

உடுமலை அடுத்த காமராஜ் நகர் ஒன்றிய நடுநிலைப்பள்ளியில். முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் லாவண்யா மருத்துவமனை மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை இணைந்து நடத்திய இலவச மருத்துவ ஆலோசனை முகாமில் ஏராளமான பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.


திருப்பூர்: உடுமலை அருகே முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் நடைபெற்ற இலவச மருத்துவ ஆலோசனை முகாமில் ஏராளமான பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பெரியகோட்டை ஊராட்சி காமராஜ் நகர் ஒன்றிய நடுநிலைப்பள்ளியில். தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் லாவண்யா மருத்துவமனை மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை இணைந்து இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது.

உடுமலை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் தங்கராஜ் மெய்ஞானமூர்த்தி தலைமையில், ஒன்றிய பொதுக்குழு தலைவர் மகாலட்சுமி முருகன் பெரியகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பேச்சியம்மாள் பாலசுப்ரமணியம், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் S.A.I. நெல்சன் முன்னிலையில் இந்த முகாம் நடைபெற்றது.

இதில் டாக்டர். பரமசிவம் தலைமையிலான மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு செய்து அவர்களுக்கான மருந்து பொருட்களை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை தி.மு.க இளைஞர் அணியை சேர்ந்த சம்பத்குமார் செய்திருந்தார். இம்முகாமில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...