திருப்பூரில் காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு முழு உடல் பரிசோதனை முகாம்!

திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள நல்லூர் பகுதியில் காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான முழு உடல் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் காவல்துறையினர் மற்றும் காவல் துறையினரின் குடும்பத்தார் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



திருப்பூர்: காங்கேயம் சாலை நல்லூர் பகுதியில் காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான முழு உடல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.



பொதுமக்களின் நலனுக்காக தங்களது குடும்பத்தையும் மறந்து இரவு பகலாக பணியாற்றி வரும் காவல்துறையினருக்கு மன உளைச்சலை தடுக்கும் வகையிலும் காவல்துறை பொதுமக்களின் நண்பன் எனும் வகையில், பசியில்லா திருப்பூர் அறக்கட்டளை, ரேவதி மெடிக்கல் சென்டர் மற்றும் ஐ பவுண்டேஷன் சார்பில் காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கும், காவலர்களின் குடும்பத்தினருக்கும் முழு உடல் பரிசோதனை முகாம் திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள நல்லூர் பகுதியில் நடைபெற்றது.

இந்த மருத்துவ முகாமினை நல்லூர் சரக காவல் உதவி ஆணையர் நந்தினி துவக்கி வைத்தார்.



தொடர்ந்து இந்த மருத்துவ முகாமில் கண் பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, பல் தொடர்பான பிரச்சனைகள், இருதயம் தொடர்பான பிரச்சனைகள் என பரிசோதனைகள் செய்யப்பட்டது.



இந்த மருத்துவ முகாமில் காவல்துறையினர் மற்றும் காவல் துறையினரின் குடும்பத்தார் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...