முறையாக சம்பளம் வழங்கக்கோரி சோமையம்பாளையத்தில் துப்புரவு பணியாளர்கள் திடீர் ஆப்பாட்டம்!

சோமையம்பாளையம் ஊராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு தாமதமாக சம்பளம் வழங்கப்பட்டு வந்த நிலையில், இதுகுறித்து ஊராட்சி செயலரிடம் கேட்டபோது முறையாக பதில் அளிக்காததை கண்டித்து தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: வடவள்ளி அடுத்த சோமையம்பாளையம் பகுதியில் முறையாக சம்பளம் வழங்கக்கோரி தூய்மை பணியாளர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சோமையம்பாளையம் ஊராட்சியில் 30 பேர் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் தாமதமாக சம்பளம் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், நடப்பு மாதத்துக்கான சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை. இதுகுறித்து ஊராட்சி செயலரிடம் முறையிட்டனர். ஆனால், அவர் முறையான பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில் தூய்மை பணியாளர்கள் சோமையம்பாளையம் ஊராட்சி அலுவலகம் முன்பு இன்று காலை காலை 7 மணியளவில் ஊராட்சி செயலரை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டமானது, 10 மணி வரை நீடித்தது.

அப்போது மாதம் 5ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும், வேலை செய்ய உபகரணங்கள் அளிக்க வேண்டும். தூய்மை பணியாளர்களை அலுவலகத்திற்குள் அனுமதிக்க வேண்டும், அரசு சலுகைகள் அனைத்தும் தர வேண்டும்.

பல ஆண்டுகளாக வேலை செய்யும் தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், வங்கியில் செலுத்திய சம்பள பணத்தில் கணிசமான தொகையை திரும்ப கேட்க கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதுகுறித்து தகவலறிந்த ஊராட்சி தலைவர் ரங்கராஜ், ஊராட்சி செயலர் செழியன் மற்றும் வடவள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்திருந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, தூய்மை பணியாளர்கள் கோரிக்கையை மனுவாக எழுதி கொடுத்து விட்டு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...