உக்கடம் தெற்கு பகுதியில் தெருநாய்கள் தொல்லையால் அழிந்து வரும் கால்நடை விலங்குகள்

கோவை மாநகராட்சி 86வது வார்டு பகுதியான தெற்கு உக்கடம் பகுதியைச்சுற்றி உள்ள பொன்விழா நகர், அன்பு நகர், பிலால் நகர், அல் அமீன் காலனி, ரோஸ் கார்டன் மற்றும் அண்ணா நகர் போன்ற பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துக் கொண்டே போகிறது. இதற்கு முக்கிய காரணம். அப்பகுதியில் திறந்தவெளி பகுதிகளில் இருக்கும் மீன் மார்கெட் மற்றும் ஆட்டிறைச்சி கடைகளில் இருந்து தெருநாய்கள் உணவு தேடி இங்கு வருவதே ஆகும். அதுமட்டுமல்லாமல், இப்பகுதியில் தெருநாய்களுக்கான மாநகராட்சி கருத்தடை மையம் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் கோவையில் பல்வேறு பகுதியில் இருந்து தெருநாய்களை இங்கு கருத்தடைக்கு கொண்டுவரப்பட்டு சிகிச்சை முடிந்து இப்பகுதியிலேயே விடுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதனால் அங்குள்ள கால்நடைகள் பாதிப்புக்குள்ளாவதாக புகார் வலுத்துள்ளது. இங்கு ஆடு, கோழி, மாடுகளை வியாபாரிகள் பட்டிகளில் வளர்த்து வருகின்றனர். தெருநாய்கள் அதிகரிப்பால் கால்நடைகள் கடிக்கப்பட்டு நாய்களால், கொல்லப்படுகின்றன. பொன்விழாநகரில் ஆரிஃப் எனும் ஆடு வளர்ப்போர் பட்டியில் தெருநாய்கள் புகுந்து கடித்ததில், 5 ஆடுகளை உயிரிழந்தன. தவிர 5 கோழிகளையும் இழுத்து சென்றுள்ளது. தொடர்ந்து, இப்பிரச்சனை நடந்து வருவதால், அப்பகுதியில் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.



அப்பகுதி மக்கள் கூறுகையில்; தெருநாய்கள் பிரச்னையால் கால்நடைகள் வளர்ப்போருக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. பல்வேறு இடங்களில் இருந்து தெருநாய்கள் கருத்தடைக்கு கொண்டுவரப்பட்டு, தெருநாய்களை சிகிச்சிக்கு பிறகு இங்கு விடுவதே இந்த பிரச்னைக்கு காரணம். அதனால், இந்த பகுதியில் மட்டும் 200 க்கும் மேற்பட்ட தெருநாய்கள் இருக்கிறது. இதுவரை, 20 க்கும் மேலான ஆடுகள், மாடுகள், 50க்கும் மேலான கோழிகள் நாய்கள் தொல்லையால் இறந்துள்ளது. இரவு நேரங்களில் மனிதர்கள் தனியாக வெளியில் வருவதற்கும் கூட மிகவும் அச்சப்படுகின்றனர். இது குறித்து பலமுறை புகார் கொடுத்தும்   இன்னும் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர்.



இது குறித்து விலங்குகள் நலவாரிய உறுப்பினர் கல்பனா கூறுகையில்; ‘இங்கு கருத்தடைக்கு கொண்டு வரப்படும் தெருநாய்களை சிகிச்சை முடிந்து இப்பகுதியிலேயே விடுவதாக கூறப்படுவது மிகவும் தவறான குற்றச்சாட்டு. சட்டபடி தெருநாய்களை கொண்டு வரப்பட்ட இடத்திற்கே தான் மீண்டும் நாய்களை விடுகிறோம். கருத்தடை மையம் ஆரம்பிக்கப்பட்டு கடந்த, 3 ஆண்டில், 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. மாதம் குறைந்தது ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை செய்யப்படுகிறது. ஒருநாய்க்கு கருத்தடை செய்வதற்கு ரூபாய் 700 முதல் 1000 வரை செலவாகும். இங்கு திறந்தவெளி பகுதியாக மீன்கடைகள், ஆட்டிறைச்சி கடைகள் இருப்பதால் தெருநாய்கள் உணவு தேடி இங்குவருவது இயல்பு. இன்னும் 8 மாதங்களில் கோவை மாநகரில் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் பணிகள் முற்றிலுமாக நிறைவடையும் நிலையுள்ளது. தற்போது பல்வேறு இடங்களில் தெருநாய்கள் தொல்லை குறைந்துள்ளது. இப்பகுதியிலும் எங்கள் பணியினை விரைவில் முடிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். இல்லையென்றால் மாநகராட்சி வெள்ளலுாரில் நாய்கள் கருத்தடை மையம் கட்டுவதற்கு இரண்டு ஏக்கரில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேறியுள்ளது. ஆனால் அங்கு எவ்வித வேலையும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு கருத்தடை மையம் ஆரம்பிக்கப்பட்டால் இடமாற்றம் செய்யப்படும்," என்றார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...