கேரளாவில் நிபா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் உடுமலை அடுத்துள்ள தமிழக கேரள எல்லை பகுதியான ஒன்பதாறு சோதனைச் சுவடியில் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செவிலியர்கள் நியமித்து பரிசோதனை செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்பூர்: கேரளாவில் நிபா வைரஸ் வேகமா பரவி வருகிறது. இதனையடுத்து தமிழக எல்லைப்பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேரளாவில் நிபா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் உடுமலை அடுத்துள்ள தமிழக கேரள எல்லை பகுதியான ஒன்பதாறு சோதனைச் சுவடியில் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செவிலியர்கள் நியமித்து பரிசோதனை செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
நேற்று முதல் தமிழ்நாட்டில் தமிழக கேரளா எல்லை பகுதியில் 24 மணி நேரமும் தீவிர சோதனை நடத்தப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்த நிலையில் உடுமலை தமிழக கேரள எல்லையில் மாலை 4 மணி வரை பரி சோதனை செய்துவிட்டு கிளம்பிச் சென்றதாக கூறப்படுகின்றது. எனவே 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செவிலியர்கள் பரிசோதனை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.