அவினாசி அத்திக்கடவு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் பேட்டி.


கோவை வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவினாசி அத்திக்கடவு நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்ட இயக்கத்தினர் மனு அளித்தனர்.

சேலம் மற்றும் எடப்பாடியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விமானம் மூலம் கோவை வந்தார். அவரை மாவட்ட, மாநகராட்சி, காவல்துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து அவரை நேரில் சந்தித்த அவினாசி அத்திக்கடவு நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தின் அத்திக்கடவு வேலுநாச்சியார் இயக்கத்தினர் மனு ஒன்றை அளித்தனர்.

 அம்மனுவில் அவினாசி அத்திக்கடவு திட்டத்தை தேசிய பேரிடராக கருதி உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட முதலமைச்சர், அவினாசி அத்திக்கடவு திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்ற உறுதிபூண்டிருந்ததாகவும், இது தொடர்பாக கோவை வந்த பிரதமர் மோடியிடமும் தாம் வலியுறித்தியிருந்ததாகவும் தெரிவித்தார். 

அவினாசி அத்திக்கடவு இத்திட்டத்தை செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் அப்போது உறுதியளித்தார். இதை தொடர்ந்து சேலத்திற்கு கார் மூலம் முதலமைச்சர் புறப்பட்டு சென்றார். முதலமைச்சர் வருகையை ஒட்டி கோவை விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...