சூலூர் மீனாட்சி அம்மன் கோவிலில் சௌந்தர்யா குழந்தைக்கு முடிக்காணிக்கை - நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பு

கோவை சூலூரில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலில் சௌந்தர்யா ரஜினிகாந்த்தின் ஆண் குழந்தைக்கு முடிக்காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த் மற்றும் அவரது மருமகன் விசாகன் குடும்பத்தினர் மட்டும் கலந்து கொண்டனர்.



கோவை: நட்சத்திர விடுதியில் சௌந்தர்யா ரஜினிகாந்த்தின் ஆண் குழந்தைக்கு முடிக்காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு மதிய விருந்து அளிக்கப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா மற்றும் கோவை சூலூரை சேர்ந்த தொழிலதிபர் வணங்காமுடி என்பவரது மகன் விசாகனை கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி என பெயர் சூட்டப்பட்டது.

இந்தநிலையில் சௌந்தர்யாவின் கணவர் விசாகனின் குலதெய்வ கோவிலான சூலூரில் உள்ள மீனாட்சியம்மன் கோவிலில் இன்று குழந்தைக்கு முடி காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக கோயில் வளாகத்தில் சிறப்பு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகளுடன் சௌந்தர்யா ரஜினிகாந்த் குடும்பத்தினர் சார்பில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மருமகன் விசாகனின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

கோவை புறநகரில் உள்ள நட்சத்திர விடுதியில் முடி காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு மதிய விருந்து அளிக்கப்படுகிறது.

இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார். முடி காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சிக்காக விசாகன் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் தம்பதியினர் தங்களது குழந்தையுடன் கடந்த இரண்டு நாட்களாக கோவையில் முகாமிட்டு விழா ஏற்பாடுகளை கவனித்து வந்தனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...