கோவையில் சுந்தரலிங்கேஸ்வரர் கோவில் நன்னீராட்டு விழா - சுற்று வட்டாரப்பகுதியினர் பங்கேற்பு

கோவை துடியலூரை அடுத்துள்ள குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கதிர்நாயக்கன்பாளையம் லட்சுமி நகர் பேஸ் 3 பகுதியில் புதியதாக ஒரே கருவறையில் அருள்தரும் சுந்தரவல்லி உடனமர் சுந்தரலிங்கேஸ்வரர் சுவாமி அம்மாள் எழுந்தருளியும், அகத்தியர் லோகமாதா மற்றும் சப்தமாதாக்கள், ஆஞ்சிநேயர் உள்ளிட்ட தெய்வ விக்ரகங்கள் அமைக்கப்பட்டன.



கோவை: சுந்தரலிங்கேஸ்வரர் சுவாமி அம்மாள் கோவிலில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று அன்னதானம் பெற்றுக்கொண்டனர்.

கோவை துடியலூரை அடுத்துள்ள குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கதிர்நாயக்கன்பாளையம் லட்சுமி நகர் பேஸ் 3 பகுதியில் புதியதாக ஒரே கருவறையில் அருள்தரும் சுந்தரவல்லி உடனமர் சுந்தரலிங்கேஸ்வரர் சுவாமி அம்மாள் எழுந்தருளியும், மகா கணபதி, செந்தில் ஆண்டவர், அருள்மிக் வராஹி அம்மன் தனி சன்னதிகளாகவும், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை அம்மன், நவநாயகர், காலபைரவர், நால்வர் பெருமக்கள், அகத்தியர் லோகமாதா மற்றும் சப்தமாதாக்கள், ஆஞ்சிநேயர் உள்ளிட்ட தெய்வ விக்ரகங்கள் அமைக்கப்பட்டன.

அதன்பிறகு கோவிலுக்கு திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த 14ஆம் தேதி மாலை 6 மணி அளவில் திருவிளக்கு பூஜை, மஞ்சள் பிள்ளையார் வழிபாடு உடன் தொடங்கிய இந்த விழாவில் வெள்ளிக்கிழமை காலை மூத்த பிள்ளையார் வேள்வி, பொன்னூத்தம்மன் கோவிலில் இருந்து 108 தீர்த்த குடங்கள் மற்றும் முளைப்பாலிகையை ஊர் பொதுமக்கள் சார்பாக எடுத்து வருதல், அன்று மாலை முதற்கால வேள்வி பூஜைகள் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து நேற்று சனிக்கிழமை காலை இரண்டாம் கால வேள்வி பூஜைகள், மாலை மூன்றாம் கால வேள்வி பூஜைகளும் நடைபெற்றன.



இன்று காலை நான்காம் கால வேள்வி பூஜை உடன் தொடங்கிய விழாவில் காலை 10 மணியளவில் யாக சாலையில் இருந்து புனித தீர்த்த குடங்கள் எடுத்துச் செல்லப்பட்டு கோபுர விமானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிவத்திரு.பெ.சிவகுமார் தலைமையில் புனித நீர் ஊற்றப்பட்டு திருக்குட நன்னீராட்டு பெருவிழாவும், அதனைத் தொடர்ந்து அருள்தரும் சுந்தரவல்லி உடன்மர் சுந்தரலிங்கேஸ்வரர் அவர்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டும், அலங்கார பூஜைகளும் நடைபெற்றது.



தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



இதில் குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கதிர் நாயக்கன்பாளையம், தொப்பம்பட்டி, ராக்கிபாளையம், வடமதுரை, துடியலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...