விநாயகர் சதுர்த்திக்கு முதல்வர் வாழ்த்து தெரிவிக்காது ஏன்? - இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன் கேள்வி!

பல்லடத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவில் பேசிய காடேஸ்வரா சுப்பிரமணியம், கிறிஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் முதல்வர் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காது ஏன்? என்றும், இந்து சமயத்திற்கு எதிராக செயல்படும் திமுக அரசுக்கு மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள் எனவும் கூறினார்.



திருப்பூர்: கிறிஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் தமிழக முதல்வர் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காது ஏன்? என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும் வகையில் சுமார் 150 சிலைகள் நிறுவப்பட்டு காலை முதலே ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.



இந்நிலையில் இன்று பல்லடம் என்.ஜி.ஆர் சாலையில் நிறுவப்பட்டுள்ள விநாயகர் சிலையினை இந்து முன்னணி கட்சி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் சாமி தரிசனம் செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது,



தமிழ்நாடு முழுக்க ஒன்றரை லட்சம் விநாயகர் சிலைகள் இந்து முன்னணி சார்பில் நிறுவப்பட்டுள்ளது. சென்னை, பெரம்பலூர் ஆகிய இடங்களில் விநாயகர் சிலை அமைக்க இடையூறு ஏற்படுத்தும் வகையில் காவல்துறையினர் பெண்களை கைது செய்துள்ளது கண்டத்துக்குரியது.

எதிர்க்கட்சித் தலைவர் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், ரம்ஜான், கிறிஸ்துமஸ் ஆகிய பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் தமிழக முதல்வர் இந்து பண்டிகையான விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காதது ஏன்?.

இந்து சமயத்திற்கு எதிராக செயல்பட்டு வரும் திமுக அரசுக்கு பொதுமக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...