துடியலூரில் விதவிதமான விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் உற்சாக வழிபாடு!

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ராஜ விநாயகர், நரசிம்மவிநாயகர், நந்தி விநாயகர், இரட்டை விநாயகர், குதிரை வண்டி விநாயகர், மயில் விநாயகர், வெள்ளைமாளிகை விநாயகர், சிங்க விநாயகர் என விதவிதமான விநாயகர் சிலைகள் வைத்து பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் விநாயகர் சதுர்த்தி விழாவை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.



கோவை: துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் விதவிதமான விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.



இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர் சுற்றுப் பகுதிகளில் இந்து முன்னணி, விஷ்வ ஹந்து பரிசத், அகில பாரத இந்து மகா சபா உள்ளிட்ட இந்து அமைப்புகள், பாரதிய ஜனதா கட்சி மற்றும் பொதுமக்கள் பொதுஇடங்கள் மற்றும் சொந்த இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.



இதில் துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே பாஜக சார்பில் மாநில மகளிர் அணி துணைத்தலைவர் வத்சலா தலைமையில் வெள்ளி கருட விநாயகர் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.



தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.



இதேபோல, துடியலூர் அரவான் திடல், ரங்கம்மாள் காலனி, என்.ஜி.ஜி.ஓ காலனி, குமரபுரம், நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம் பிரிவு, வடமதுரை, உருமாண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ராஜ விநாயகர், நரசிம்மவிநாயகர், நந்தி விநாயகர், இரட்டை விநாயகர், குதிரை வண்டி விநாயகர், மயில் விநாயகர், வெள்ளைமாளிகை விநாயகர், சிங்க விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் விநயாகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து கோபூஜை, அஸ்வபூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. மேலும் வரும் அனைத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. தொடர்ந்து வரும் புதன் கிழமையன்று இந்த விநாயகர்கள் வெள்ளகிணர் குளத்தில் கரைக்கப்படுகிறது. விநாயகர் சிலைகளுக்கு இரவு பகலாக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...