கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ராஜ விநாயகர், நரசிம்மவிநாயகர், நந்தி விநாயகர், இரட்டை விநாயகர், குதிரை வண்டி விநாயகர், மயில் விநாயகர், வெள்ளைமாளிகை விநாயகர், சிங்க விநாயகர் என விதவிதமான விநாயகர் சிலைகள் வைத்து பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் விநாயகர் சதுர்த்தி விழாவை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
கோவை: துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் விதவிதமான விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர் சுற்றுப் பகுதிகளில் இந்து முன்னணி, விஷ்வ ஹந்து பரிசத், அகில பாரத இந்து மகா சபா உள்ளிட்ட இந்து அமைப்புகள், பாரதிய ஜனதா கட்சி மற்றும் பொதுமக்கள் பொதுஇடங்கள் மற்றும் சொந்த இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.
இதில் துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே பாஜக சார்பில் மாநில மகளிர் அணி துணைத்தலைவர் வத்சலா தலைமையில் வெள்ளி கருட விநாயகர் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல, துடியலூர் அரவான் திடல், ரங்கம்மாள் காலனி, என்.ஜி.ஜி.ஓ காலனி, குமரபுரம், நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம் பிரிவு, வடமதுரை, உருமாண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ராஜ விநாயகர், நரசிம்மவிநாயகர், நந்தி விநாயகர், இரட்டை விநாயகர், குதிரை வண்டி விநாயகர், மயில் விநாயகர், வெள்ளைமாளிகை விநாயகர், சிங்க விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் விநயாகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து கோபூஜை, அஸ்வபூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. மேலும் வரும் அனைத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. தொடர்ந்து வரும் புதன் கிழமையன்று இந்த விநாயகர்கள் வெள்ளகிணர் குளத்தில் கரைக்கப்படுகிறது. விநாயகர் சிலைகளுக்கு இரவு பகலாக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.