தாராபுரத்தில் இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரனை

தாராபுரத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.



திருப்பூர்: கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தந்தை தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்பொழுது மகளும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நாடார் தெரு பகுதியைச் சேர்ந்த வெற்றி வேந்தன்- புனிதா தம்பதியினர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெற்றிவேந்தன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

வெற்றிவேந்தனின் மூத்த மகள் ரித்திகா (18) காங்கயத்தில் உள்ள தனியார் கல்லூரியில் (பி.காம் சி.ஏ) இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ரித்திகாவின் தாய் புனிதா இன்று காலை வழக்கம் போல் காலை 10 மணிக்கு சென்று விட்டு மாலை 5.30 மணி அளவில் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்பொழுது மகள் ரித்திகா அறை உள்பக்கம் தாழிட்டிருந்தது நீண்ட நேரம் ஆகியும் திறக்காமல் இருந்த்தது. இதனால் சந்தேகம் அடைந்து அவரது தாயார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த பொழுது ரிருத்திகா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ரித்திகாவை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.



அங்கு ரித்திகாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ரித்திகா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு சென்ற தாராபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துக்குமார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தாராபுரத்தில் இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...