டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் - யானைகளுக்கு சிறப்பு பூஜை

பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் வளர்ப்பு யானைகள் முகாமில், விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது யானைகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.


கோவை: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு யானைகளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, யானைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு பழ வகைகள் உணவாக வழங்கப்பட்டன.

பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் வளர்ப்பு யானைகள் முகாமில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, உலாந்தி வனச்சகரம் டாப்சிலிப் அருகே, கோழிகமுத்தி முகாமில், 26 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்படுகின்றன.

இந்த முகாமில், விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது.புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்ரமணியம், துணை இயக்குனர் பார்கவதேஜா முன்னிலை வகித்தனர். உதவி வன பாதுகாவலர் செல்வம், வனச்சரகர் சுந்தரவேல் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அங்குள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோவிலில் வரிசையாக யானைகள் நிறுத்தப்பட்டன. அதன்பின், விநாயகப்பெருமானுக்கும், யானைகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, யானைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டதுடன், பழ வகைகள் உணவாக வழங்கப்பட்டன.

Newsletter

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...