கோவை சிறையில் சிறை காவலர்களுக்கும் கைதிளுக்கும் மோதல் - 4 காவலர்கள் மருத்துவமனையில் அனுமதி

கோவை மத்திய சிறைச்சாலையில் வால் மேடு பிளாக் என்ற பிளாக்கில் சிறை காவலர்களுக்கும் கைதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 4 சிறை காவலர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



கோவை: சிறைக்காவலர்களுக்கும்-கைதிகளுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் மோதலில் ஈடுபட்ட 7 கைதிகளும் சிறை வளாகத்தில் உள்ள மரத்தின் மீது ஏறி பிளேடை கொண்டு உடல்களை கீறி கொண்டு போராட்டம் நடத்தினர்.

கோவை மத்திய சிறைச்சாலையில் வால் மேடு பிளாக் என்ற பிளாக்கில் சுமார் 600 கைதிகள் உள்ளனர். அவர்களை கண்காணிக்க வார்டர்கள், சிறை காவலர்கள் உள்ளனர். இந்நிலையில் சிறை காவலர்களுக்கும் கைதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 4 சிறை காவலர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலையில் தினேஷ்(எ) மண்டை தினேஷ், அய்யனார், அழகர்சாமி, ஹரிஹரன், கிஷோர்குமார், உதயகுமார், அரவிந்த் என்ற 7 கைதிகளுக்கும் சிறை காவலர்களுக்கும் இடையே ஏதோ காரணத்தால் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. வாக்குவாதம் முற்றி கைகளப்பாக மாறியது.



இதில் ராகுல், மோகன்ராஜ், பாபுஜான், விமல்ராஜ் ஆகிய 4 சிறை காவலர்களுக்கு காயம் ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே அந்த 7 கைதிகளும் சிறை வளாகத்தில் உள்ள மரத்தின் மீது ஏறி பிளேடை கொண்டு உடல்களை கீறி கொண்டு போராட்டம் மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து இதர சிறை காவலர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சிறைச்சாலை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இது குறித்து சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகின்றது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட கைதிகள் 20-25 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...