ஓலா மற்றும் உபர் உள்ளிட்டவற்றின் போட்டிகளை எதிர்கொள்ள மூவ்லி நிறுவனத்துடன் கைகோர்த்த உழைக்கும் கரங்கள்

கோவையை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் உழைக்கும் கரங்கள் ஆட்டோ சேவை உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நலச் சங்கம் மூவ்லி நிறுவனத்துடன் இணைந்து மொபைல் செயலி சேவையினை உருவாக்கியுள்ளது.



செயலிகள் மூலம் இயக்கப்படும் டேக்சி உள்ளிட்ட ஆட்டோ சேவையினால் நாடுமுழுவதும் உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர்கள் மிகப்பெரியளவில் பாதிக்கப்பட்டு போராட்டங்களில் ஈடுபடுவது வாடிக்கையாகிவிட்டது. தொடர்ந்து நடுத்தர ஆட்டோ ஓட்டுநர்கள் ஓலா, உபர் உள்ளிட்ட டேக்சி சேவையினை எதிர்த்தும், போட்டியிட்டும் வருகின்றனர். இதுபோன்ற பெரிய நிறுவனங்களின் போக்குவரத்து சேவையினால் உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் மிகப்பெரியளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. அவர்களால், தங்களது வாகனத்தின் வாடகை கூட செலுத்தமுடியாமல் திவாலாகின்றனர்.



இந்நிலையில், உழைக்கும் கரங்கள் ஆட்டோ சங்கமும், மூவ்லி நிறுவனமும் இணைந்து இந்தியாவில் முன்னோடியாக ஒரு டேக்சி சேவை செயலியினை அறிமுகம் செய்துள்ளனர். இந்த செயலியின் மூலம் மக்களின் சேவைக்கு கோவை மாவட்டத்தில் 375 டேக்சி, ஆட்டோ வாகனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. 

இதற்காக, கூடுதல் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பமும், பயிற்சியினையும் மூவ்லி ஆதரவாக வழங்கவுள்ளது. இந்த கூட்டமைப்பின் முயற்சி சமுதாயத்திலும், சந்தை நிலவரத்திலும், டேக்சி ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்திலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என மூவ்லி நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து உழைக்கும் கரங்கள் தலைவர் பி.ராஜா கூறுகையில், இந்த செயலியினாது மிகப்பெரும் டேக்சி சேவை நிறுவனங்களால் பாதிக்கப்பட்டு வந்த உள்ளூர் ஓட்டுநர்களுக்கு ஒரு நிவாரனமாக அமைந்துள்ளது. எங்களுக்கென தனி அங்கீகாரம் கிடைத்ததைப் போல உணர்கிறோம். வாடிக்கையாளர்களிடமும், ஓட்டுநர்களிடமும் இம்முயற்சி நல்ல நட்புறவை ஏற்படுத்தும். இதன் மூலம் விரைவில் எங்களது வாழ்வாதாரம் உயரும் என நம்புகிறோம் என தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...