திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் -1001 விநாயகர் சிலைகள் கரைப்பு

திருப்பூரில் இந்து முன்னணி சார்பில் ஆயிரத்து ஒரு பிள்ளையார் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சமளாபுரம் பகுதியில் உள்ள நீர் நிலையில் கரைக்கப்பட்டன.



திருப்பூர்: பிரம்மாண்டமான 10 அடி உயர ஆஞ்சநேயர் சிலை, 20 அடி உயர பிரம்மாண்ட விநாயகர் சிலை என ஆயிரத்து ஒரு விநாயகர் சிலைகளை இந்து முன்னணியினர் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.



திருப்பூர் மாநகரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த 18ஆம் தேதி இந்து முன்னணி சார்பில் 1001 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, சிறப்பு வழிபாடுகள் செய்யபட்டன.

அதனைத் தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி விசர்சன ஊர்வலம் மூன்று இடங்களில் இருந்து புறப்பட்டது.



அதில் பிரம்மாண்டமான 10 அடி உயர ஆஞ்சநேயர் சிலை, 20 அடி உயர பிரம்மாண்ட விநாயகர் சிலைகள், உள்ளடக்கிய ஆயிரத்தி ஒரு விநாயகர் சிலைகள், புதிய பேருந்து நிலையம், தாராபுரம் ரோடு, செல்லம் நகர் ஆகிய மூன்று இடங்களில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று ஆலங்காடு பகுதியில் நிறைவடைந்தது.

அதனைத் தொடர்ந்து அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. பின்னர் அனைத்து சிலைகளும் மங்களம் சாலை வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சமளாபுரம் பகுதியில் உள்ள நீர் நிலையில் கரைக்கப்பட்டன.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...