பட்டா நிலங்களில் வன விலங்குகளின் தாக்குதலைதடுக்க தவறிய வனத்துறையைகண்டித்து, மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

கோவை அருகே பட்டா நிலங்களில் வன விலங்குகளின் தாக்குதலைதடுக்க தவறிய வனத்துறையைகண்டித்து, மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை அருகே உள்ள மேற்குதொடர்ச்சி அடிவார பகுதிகளில் வன விலங்குகள் மற்றும் மனிதமோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், கடும் வறட்சிகாரணமாக காட்டு யானைகள் பட்டா நிலங்களுக்குள் புகுவது கடந்த சில நாட்களாகஅதிகரித்துள்ளது. இதனால் பல இடங்களில் விவசாயிகள் படுகாயமடையும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. 

இதனிடையே கோவை வரப்பாளையம், தடாகம் உள்ளிட்டபகுதிகளில் கடந்த சில நாட்களாக 6 வயதுடைய குட்டி பெண் யானைஒன்று வாயில் காயங்களுடன் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்குள் அட்டகாசம் செய்து வருவதாக கூறப்படுகிறது. வீட்டில் வைக்கப்பட்டுள்ள உணவு பொருட்களுக்காக வீட்டிற்குள்நுழைவதும், அங்குள்ள முதியவர்களை தாக்குவதும் தொடர்கதையாகி உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். 

அந்த யானையைபிடித்து வேறு பகுதிக்கு அப்புறப்படுத்த வேண்டும் அல்லதுஅதனை முகாமில் கொண்டுசேர்க்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துவந்தனர். நேற்று மாங்கரைவனப்பகுதியில் 4 வயது ஆண் குட்டி யானை பிடிக்கப்பட்டு சாடிவயல் முகாமிற்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில்,வனத்துறையினர் சேட்டை செய்யும் யானையை பிடிக்க உரியநடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து யானையை பிடிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான தகவலை தரும் வரை அங்கிருந்து செல்லப்போவதில்லை எனவும் அவர்கள் கூறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் அவர்களுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின்போது, காட்டு யானையை பிடிக்க தலைமை வனப்பாதுகாவலர் அளித்துள்ள அனுமதி கடிதத்தை வனத்துறையினர் அளித்ததால் விவசாயிகள் முற்றுகையைகைவிட்டு கலைந்து சென்றனர். இந்த முற்றுகை காரணமாகஅப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...