உடுமலை பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - வனத்துறை ஊழியர்கள் தீவிர கண்காணிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி பஞ்சலிங்க அருவி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று மழை வெளுத்து வாங்கியது. இதனால் பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.



திருப்பூர்: பஞ்சலிங்க அருவியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிவதால், கோவில் ஊழியர்களும், வனத்துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குருமலை, குழிப்பட்டி ஆகிய பகுதிகளில் நேற்று இடைவிடாமல் பெய்தது.



இதன்காரணமாக பல மாதங்களாகவே வறண்டு காணப்பட்ட பஞ்சலிங்க அருவியில் திடீர் நீர்வரத்து அதிகமாகி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.



இதனால் திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் திருக்கோவில் பின்புறம் உள்ள கன்னிமார் கோயில் பகுதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.



நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோவில் ஊழியர்கள் மற்றும் வனத்துறையினர் இப்பகுதியில் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...