ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரியில் இன்று 'இரண்டாம் ஆண்டு கல்லூரி விழா' கொண்டாட்டம்

கோவை மாவட்டம், கோவைப்புதூரில் செயல்பட்ட வரும் ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கல்லூரி விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலைமாமணி முனைவர் இளசை. சுந்தரம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.



அப்போது அவர் பேசுகையில், மாணவர்கள் உயர்ந்த எண்ணங்களும், நற்சிந்தனைகளும் உடையவர்களாக விளங்க வேண்டும். சமூக அக்கறை உடையவர்களாக தொண்டாற்ற வேண்டும் என்று கூறினார். மேலும் எல்லோரையும் பாராட்ட வேண்டும்.  இன்று சமுதாயத்தில் பிறரை பாராட்டாமல் குறை கூறியே வருகின்றனர். பிறரின் குறையினை குற்றமாக கருதாமல் அவற்றினை அவர்கள் புரியும்படி திருத்த வேண்டும்.



பிறரை பாராட்டி பழக கற்றுக் கொள்ளுங்கள். நாம் செய்யும் செயல்களில் புதுமையினைப் புகுத்த வேண்டும்.  காலத்திற்கேற்றாற் போல் நாம் நமது செயல்களைச் செய்ய வேண்டும். நேர்மையாக வாழ வேண்டும். பிறரிடம் கையேந்தாமல் சொந்தமாக சம்பாதித்து தனது நிலையினை உயர்த்த வேண்டும் எனக் கூறினார்.

இவ்விழாவில் வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் பி.பிரியா வரவேற்புரை வழங்கினார். முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் கி.சுந்தரராமன் வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அனைத்து வகுப்புகளில் படிப்பில் முதலிடத்தினைப் பெற்ற மாணவர்கள், பல போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சிறப்பாக பணியாற்றிய பேராசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும், இதில் பல போட்டிகளில் வெற்றி பெற்று அதிக புள்ளிகள் பெற்று வணிகவியல் துறை ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றது. இரண்டாம் இடத்தை கணிதத்துறை வென்றது. முதல்வர் முனைவர் வி.இராதிகா கல்லூரி ஆண்டறிக்கையை வாசித்தார். நிரைவாக கணினி அறிவியல் துறைத்தலைவர் சீமாதேவ் அக்ஷதா நன்றியுரை வழங்கினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...