கோவை மாவட்டம் வால்பாறையில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி அமைப்பினர் சார்பில் வைக்கப்பட்ட சிலைகள் அனைத்தும் இரவு நேரத்திலும் போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டன.
கோவை: விநாயகர் சதூர்த்தி திருவிழாவையொட்டி இந்து முன்னணி அமைப்பினர் சார்பாக கோவை மாவட்டம் வால்பாறை பகுதிகளில் 108 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.
அவ்வாறு பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த, சிலைகள் எஸ்டேட் பகுதிகளில் இருந்து வாகனங்கள் மூலம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
அப்போது வால்பாறையில் உள்ள சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டு வால்பாறை பிரதான சாலை வழியாக ஆடல், பாடல், நடனமாடி சிலைலை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
இரவு 9 மணி அளவில் நடுமலை எஸ்டேட் பகுதியில் உள்ள, ஆற்றில் கிரேன் மூலம் விநாயகர் சிலைகள் அனைத்தும் கரைக்கப்பட்டன.
விநாயகர் சிலை கரைக்கும் நிகழ்வை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். 300க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.