குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளி -  நீதிமன்றத்தில் ஆஜராக  சி.பி.சி.ஐ.டி நோட்டீஸ்

1997 ஆம் ஆண்டு சென்னை வேப்பேரி காவல்நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் கோவையை சேர்ந்தவர் நீதிமன்றத்தில் முன்னிலையாக சிபிசிஐடி போலிசாரால் சம்மன் அனுப்பபட்டது.


கோவை: கோவை செல்வபுரம் கல்லா மேடு மட்டசாலை பகுதியைச் சேர்ந்த முகமது அலி.இவரது மகன் அயூப் என்கிற அஷ்ரப் அலி (வயது 22)இவர் மீது சென்னை வேப்பேரி காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்த வழக்கிற்காக சென்னை சேர்ந்த சிபிசிஐடி சிஐடி போலீசார் இவரை தேடி கோவை வந்தனர்.

கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள இவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீடு பூட்டப்பட்டிருந்தது. அருகில் இருந்த நபர்களிடம் இதுதான் அசரப் அலி வீடா என்பதை உறுதி செய்து கொண்டு அவரது வீட்டின் சுவரில் தலைமறைவு குற்றவாளி என்று அவருடைய புகைப்படத்துடன் கூடிய நோட்டீசை ஒட்டினர்.

மேலும் இவர் குறித்து செல்வபுரம் கல்லா மேடு பகுதியில் சிபிசிஐடி போலீசார் 5க்கும் மேற்பட்டோர் விசாரணை மேற்கொண்டனர்.

சென்னை வேப்பேரி காவல் நிலைய வெடிகுண்டு வழக்கில் 1997 ஆம் ஆண்டு நடைபெற்றது.

இந்த வெடிகுண்டு சம்பவத்தில் வேப்பேரி காவல் நிலைய காம்பவுண்ட் சுவர் தரைமட்டமாகியது.

இதைத் தொடர்ந்து இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு குற்ற எண் 2996, 1997 என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சென்னை இரண்டாவது கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதாகவும் தொடர்ந்து இவருக்கு பிடிவாரண்ட் அளிக்கப்பட்டும் இவர் தலைமறைவாக பதுங்கி இருக்கிறார் என்று போலீசார் தெரிவித்தனர்.

வருகின்ற 16 10 2023 காலை 10 மணிக்கு சென்னை எழும்பூர் இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் இவர் ஆஜராக வேண்டும் என்று அயூப் என்கிற அஷ்ரப் அலி சம்பந்தப்பட்ட அனைத்து இடங்களிலும் இதுபோன்ற தலைமறைவு குற்றவாளி என்று புகைப்படத்துடன் கூடிய நோட்டீசை ஒட்டி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...