கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், 8-வது வார்டுக்குட்பட்ட தடாகம் ரோடு, வேலாண்டிபாளையம் பகுதியில் வசிக்கும் வீடுகளுக்குச் செல்லும் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து, அதேப்பகுதியில், கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று தண்ணீர் தொட்டிகளில் அபேட் மருந்தினை ஊற்றுவதை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர், அப்பகுதியில் உள்ள சீமைக் கருவேளமரங்களை பார்வையிட்டு அதனை உடனடியாக அகற்றுமாறு மாநகராட்சி அலுலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, மேற்கு மண்டல 5-வது வார்டுக்குட்பட்ட கவுண்டம்பாளையம், கன்னிகா நகர் பகுதியில் மீட்கப்பட்ட மாநகராட்சி பொது ஒதுக்கீட்டு இடத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து, வடக்கு மண்டலம், 3-வது வார்டுக்குட்பட்ட சுப்ரமணியம்பாளையம் பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் மனித கழிவுகள் மற்றும் சமயற்கழிவுகளைக் கொண்டு உயிரி எரிவாயுக்கூடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வுகளின் போது மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலருடன், மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், உதவி ஆணையர் கே.ராமைய்யா, வடக்கு மண்டல உதவி ஆணையர் சரவணன், செயற்பொறியாளர் (பொ) சரவணக்குமார், உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி, உதவி நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, அதேப்பகுதியில், கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று தண்ணீர் தொட்டிகளில் அபேட் மருந்தினை ஊற்றுவதை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர், அப்பகுதியில் உள்ள சீமைக் கருவேளமரங்களை பார்வையிட்டு அதனை உடனடியாக அகற்றுமாறு மாநகராட்சி அலுலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, மேற்கு மண்டல 5-வது வார்டுக்குட்பட்ட கவுண்டம்பாளையம், கன்னிகா நகர் பகுதியில் மீட்கப்பட்ட மாநகராட்சி பொது ஒதுக்கீட்டு இடத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து, வடக்கு மண்டலம், 3-வது வார்டுக்குட்பட்ட சுப்ரமணியம்பாளையம் பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் மனித கழிவுகள் மற்றும் சமயற்கழிவுகளைக் கொண்டு உயிரி எரிவாயுக்கூடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வுகளின் போது மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலருடன், மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், உதவி ஆணையர் கே.ராமைய்யா, வடக்கு மண்டல உதவி ஆணையர் சரவணன், செயற்பொறியாளர் (பொ) சரவணக்குமார், உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி, உதவி நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.