கோரிக்கை வைத்த மலைவாழ் மக்கள் - உடனடி நடவடிக்கை எடுத்த கோவை ஆட்சியர்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்ற ஆட்சியர் கிராந்திகுமார், உயிருக்கு போராடும் மலைவாழ் மக்களை சேர்ந்தவருக்கு உடனடி மருத்துவ காப்பீடு திட்டம் அட்டையை வழங்கினார்.


கோவை: மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் ஆனைகட்டி வடக்கலூர் மலைவாழ் பகுதியை சேர்ந்த மல்லன் என்பவர் அவரது மகள் மற்றும் மருமகன் பாலக்காடு சாலையில் ஈச்சர் வாகனத்தில் வாழைக்காய் லோடு ஏற்றி சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத தருணத்தில் நடைபெற்ற விபத்தில் மருமகன் சம்பவ இடத்தில் உயிரிழந்ததாகவும் அவரது மகள் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாகவும் மனு அளித்தார்.

தற்பொழுது கேரள மாநிலம் கோட்டையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில் மகளுக்கு உடனடியாக மேல் சிகிச்சை அளிக்க முதல்வரின் மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்க வேண்டும் என கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

அவரது கோரிக்கை மனுவை பரிசீலித்து உடனடியாக ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் உடனடியாக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அவருக்கான மருத்துவ காப்பீட்டு அட்டையை வழங்கினார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...