ஆர்.கே.நகர் இடைதேர்தலில் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை வேட்பாளராக அறிவித்து இருப்பதன் மூலம் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையத்தில் தெரிவித்தார்.
சேலத்தில் நடைபெற்ற நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் இன்று விமானம் மூலம் சென்னை செல்கின்றார். அதற்காக கோவை விமான நிலையம் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவினர் வரவேற்பளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிச்சாமி, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அதிமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை கழகத்தின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருப்பதால், 100 சதவிகித வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என தெரிவித்தார்.
இந்த முடிவு கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தாதா என்ற செய்தியாளரின் கேள்விக்கு, அதிருப்தி என யாருமே சொல்லவில்லை என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சேலத்தில் நடைபெற்ற நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் இன்று விமானம் மூலம் சென்னை செல்கின்றார். அதற்காக கோவை விமான நிலையம் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவினர் வரவேற்பளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிச்சாமி, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அதிமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை கழகத்தின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருப்பதால், 100 சதவிகித வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என தெரிவித்தார்.
இந்த முடிவு கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தாதா என்ற செய்தியாளரின் கேள்விக்கு, அதிருப்தி என யாருமே சொல்லவில்லை என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.