கோவையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ நாராயண குரு கல்லூரியின் குடியுரிமை நுகர்வோர் கிளப் சார்பில் அக்கல்லூரியின் விவேகானந்தா ஹாலில் இன்று உலக நுகர்வோர் உரிமை தினம் அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் குடியுரிமை நுகர்வோர் கிளப் ஒருங்கிணைப்பாளர் எம்.மகேஷ்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் கே.வி.சுரேந்திரன் இந்நிகழ்விற்கு தலைமையேற்று உரையாற்றினார்.
கோவை பிஐஎஸ் விஞ்ஞானி வி.ரமேஷ் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், பிஐஎஸ் எவ்விதமான செயல்களை மேற்கொள்ள வேண்டும், மற்றும் உலக நுகர்வோர் உரிமை தினம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு நுகர்வோர் சங்க பொதுச் செயலாளர் என்.பிரதீப் குமார், நுகர்வோர் உரிமைகள் மற்றும் குடியுரிமை நுகர்வோர் கிளப்பின் பங்கு மற்றும் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடினார்.

நிரைவாக, வர்த்தகத்துறை துணை பேராசிரியர் எஸ்.பாலாஜி நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் குடியுரிமை நுகர்வோர் கிளப் ஒருங்கிணைப்பாளர் எம்.மகேஷ்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் கே.வி.சுரேந்திரன் இந்நிகழ்விற்கு தலைமையேற்று உரையாற்றினார்.
கோவை பிஐஎஸ் விஞ்ஞானி வி.ரமேஷ் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், பிஐஎஸ் எவ்விதமான செயல்களை மேற்கொள்ள வேண்டும், மற்றும் உலக நுகர்வோர் உரிமை தினம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு நுகர்வோர் சங்க பொதுச் செயலாளர் என்.பிரதீப் குமார், நுகர்வோர் உரிமைகள் மற்றும் குடியுரிமை நுகர்வோர் கிளப்பின் பங்கு மற்றும் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடினார்.

நிரைவாக, வர்த்தகத்துறை துணை பேராசிரியர் எஸ்.பாலாஜி நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.