ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் இன்று உலக நுகர்வோர் உரிமை தினம் அனுசரிப்பு

கோவையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ நாராயண குரு கல்லூரியின் குடியுரிமை நுகர்வோர் கிளப் சார்பில் அக்கல்லூரியின் விவேகானந்தா ஹாலில் இன்று உலக நுகர்வோர் உரிமை தினம் அனுசரிக்கப்பட்டது.



இந்நிகழ்வில் குடியுரிமை நுகர்வோர் கிளப் ஒருங்கிணைப்பாளர் எம்.மகேஷ்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் கே.வி.சுரேந்திரன் இந்நிகழ்விற்கு தலைமையேற்று உரையாற்றினார். 

கோவை பிஐஎஸ் விஞ்ஞானி வி.ரமேஷ் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், பிஐஎஸ் எவ்விதமான செயல்களை மேற்கொள்ள வேண்டும், மற்றும் உலக நுகர்வோர் உரிமை தினம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு நுகர்வோர் சங்க பொதுச் செயலாளர் என்.பிரதீப் குமார், நுகர்வோர் உரிமைகள் மற்றும் குடியுரிமை நுகர்வோர் கிளப்பின் பங்கு மற்றும் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடினார்.



நிரைவாக, வர்த்தகத்துறை துணை பேராசிரியர் எஸ்.பாலாஜி நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...