தாராபுரத்தில் நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அதிக வாக்குகள் பெறுவது மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
திருப்பூர்: தாராபுரத்தில் நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில் அக்கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சென்னை பாலு தலைமையில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி முன்னிலையில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் மற்றும் இளைஞர் இளம் பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தாராபுரம் மேற்கு ஒன்றியம் கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக திருப்பூர் கிழக்கு மாத்தம் சார்பில் தாராபுரம் பகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளருக்கு அதிக வாக்கு பெற்று வெற்றி பெறச் செய்ய பாடுபட வேண்டும் எனவும்,அதிமுகவில்புதிய உறுப்பினர்களை சேர்த்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
ஒவ்வொரு பொறுப்பாளர்களும் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் எனவும் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சென்னை பாலு தலைமையில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி முன்னிலையில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் மற்றும் இளைஞர் இளம் பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தாராபுரம் மேற்கு ஒன்றியம் கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக திருப்பூர் கிழக்கு மாத்தம் சார்பில் தாராபுரம் பகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளருக்கு அதிக வாக்கு பெற்று வெற்றி பெறச் செய்ய பாடுபட வேண்டும் எனவும்,அதிமுகவில்புதிய உறுப்பினர்களை சேர்த்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
ஒவ்வொரு பொறுப்பாளர்களும் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் எனவும் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.