வால்பாறையில் தொடர் மழை - இரண்டு வீடுகள் இடிந்து சேதம்

வால்பாறையில் பெய்த தொடர் மழை காரணமாக 2 வீடுகளின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அதிர்ஷ்ட வசமாக வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.


கோவை: கோவை வால் பாறையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் தொடர்ந்து இரண்டு வார காலமாக தொடர்ந்து சாரல் மழையும் கன மழையும் பெய்து வருகிறது .

இதன் காரணமாக பல்வேறு இடங்களில் சிறு சிறு நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இதன் காரணமாக படிக்கட்டுகள் தடுப்பு சுவர்கள் சேதமடைகின்றன.

இந்நிலையில் வால்பாறை நகரை ஒட்டி உள்ள அண்ணா நகர் பகுதியில் அமுதா என்பவரின் வீட்டின் மேல் கூரை இடிந்து விழுந்து பக்கத்தில் உள்ள ஆறுமுகம் என்பவரின் வீடும் சேதமடைந்தது.



இதனால் இரண்டு வீட்டின் மேல் கூரை சேதம் அடைந்தது வீட்டில் இருந்தவர்களுக்கு எந்தவித சேதம் இன்றி தப்பினர்.



தகவல் அறிந்த வால்பாறை நகரமன்ற உறுப்பினர் காமாட்சி கணேசன் நகர கழக செயலாளர் சுதாகரன் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் பாதிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆறுதல் கூறியதோடு நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்தனர்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிது பாதிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...