உடுமலை அருகே இலவச மருத்துவ முகாம் - ஏராளமானோர் பங்கேற்பு

உடுமலை அருகே முக்கோணம் ஊராட்சியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் நடத்தப்பட்ட இலவச மருத்துவ முகாமில் பலர் பங்கேற்று பயன் பெற்றனர்.


திருப்பூர்: உடுமலை அருகே நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள முக்கோணம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.



உடுமலை சுற்றுச்சூழல் சங்க தலைவர் கு.சி மணி தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் செ சரவணன் வரவேற்புரை வழங்கினார்.

பழனி நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியர் இளங்கோவன் வெற்றியின் முதல் படி என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவரைத் தொடர்ந்து பட்டிமன்ற பேச்சாளர் ப கணபதி நாளைய பாரதம் நமதே என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

பிரியா நர்சிங் முதல்வர் எம் தவசு மணி தலைமையில் 12 பேர் கொண்ட குழு சர்க்கரை நோய் வியாதி கண்டறிதல், ரத்த பரிசோதனை, ரத்த வகை கண்டறிதல், ரத்த அழுத்தம் கண்டறிதல் முதலான பல்வேறு பரிசோதனைகளை முக்கோணம் பொதுமக்களுக்கு செய்தனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயன்படுத்தி முகாமை பயன்படுத்தி கொண்டனர். நர்சிங் கல்லூரி துணை முதல்வர் மேனகா, இயற்கை உணவுகளும், இனிய வாழ்வும் என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

நோய் நொடிகள் அன்டாதவாறு நம்மை தற்காத்துக் கொள்வது எப்படி என்றும் அவர் விளக்கி கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...