சுக்கம்பாளையத்தில் கிராம சபை கூட்டம் - ஊராட்சி நிர்வாகம் சரியில்லை என கிராம மக்கள் உண்ணாநிலை

பல்லடம் அருகே சுக்கம்பாளையம் ஊராட்சியில் வரவு செலவு கணக்கு தொடர்பான ஆவணங்களை கிராம சபை கூட்டங்களில் முறையாக சமர்ப்பதில்லை என குற்றம் சாட்டிய பொதுமக்கள் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: முறையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வரவு என்று கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் உண்ணாநிலையில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சுக்கம்பாளையம் ஊராட்சியில் இன்று காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்று வருகிறது.



இந்நிகழ்வில் சுக்கம்பாளையம், காளிவேலம்பட்டி, ஊஞ்சபாளையம், டிஎம்எஸ் காலனி, ஆகிய ஊர்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



ஊராட்சி நிர்வாகத்தின் வரவு செலவு கணக்கு தொடர்பான ஆவணங்களை கிராம சபை கூட்டங்களில் முறையாக சமர்ப்பதில்லை எனவும், ஊராட்சியில் பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்வதில்லை எனவும் கடந்த இரண்டு வருடங்களில் குடிநீர் குழாய்களை பராமரிப்பதற்கு மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் என்ற விதத்தில் இரண்டு வருடத்தில் 34 லட்சம் ரூபாய்க்கு பணம் செலவாகியிருப்பதாக ஊராட்சி நிர்வாகம் கணக்கு காட்டி இருப்பதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்து 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ஊராட்சி நிர்வாகம் முறையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வரவு செலவு கணக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடர் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...