காந்தி ஜெயந்தி: தமிழகம்‌ முழுவதும்‌ 1.59 லட்சம்‌ மரங்களை நட்ட காவேரி கூக்குரல்‌!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஈஷாவின்‌ காவேரி கூக்குரல்‌ இயக்கம்‌ தமிழகம்‌ மற்றும்‌ புதுச்சேரியில்‌ ஒரு லட்சத்து 59 ஆயிரம்‌ மரக்கன்றுகளை விவசாய நிலங்களில்‌ நட்டு அசத்தியுள்ளது.


கோவை: ஈஷாவின்‌ காவேரி கூக்குரல்‌ இயக்கம்‌ தமிழகம்‌ மற்றும்‌ புதுச்சேரியில்‌ ஒரு லட்சத்து 59 ஆயிரம்‌ மரங்கன்றுகள் நட்டு சாதனை படைத்துள்ளது.



தமிழ்நாட்டின்‌ மிகப்பெரிய சுற்றுச்சூழல்‌ இயக்கமாக செயல்பட்டு வரும்‌ காவேரி கூக்குரல்‌ இயக்கம்‌ மாபெரும்‌ மரம்‌ நடும்‌ விழாக்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.



குறிப்பாக, விவசாயிகளை ஒரு பயிர்‌ விவசாய முறையில்‌ இருந்து தற்சார்பு பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்ட மரம்சார்ந்த விவசாய முறைக்கு மாற்றும்‌ பணியையும்‌ செய்து வருகிறது. அந்த வகையில்‌, கிராமப்புற மக்களின்‌ நலனில்‌ அதிக அக்கறை காட்டிய மகாத்மா காந்தியின்‌ பிறந்த நாளான இன்று தமிழ்நாட்டில்‌ 94 விவசாய நிலங்களில்‌, சுமார்‌ 1,800 ஏக்கர்‌ பரப்பளவில்‌ மொத்தம்‌ 1.59 லட்சம்‌ மரக்கன்றுகள்‌ நடவு செய்யும்‌ பணி நடைபெற்றது.

காவேரி கூக்குரல்‌ இயக்க களப்‌ பணியாளர்களின்‌ ஆலோசனைகளின்படி, தேக்கு, செம்மரம்‌, சந்தனம்‌, மகோகனி உள்ளிட்ட விலை உயர்ந்த டிம்பர்‌ மரக்கன்றுகளை விவசாயிகள்‌ தங்கள்‌ நிலங்களில்‌ நடவு செய்தனர்‌.



காவேரி ஆற்றில்‌ நீர்‌ வரத்து நிலையில்லாமலும்‌ குறைந்தும்‌ வரும்‌ இந்த காலகட்டத்தில்‌ காவேரி ஆற்றின்‌ நீர்‌ பிடிப்பு பகுதிகளில்‌ மரங்கள்‌ நடுவது மிகவும்‌ அவசியமாக உள்ளது. எனவே தமிழக மற்றும்‌ கர்நாடக விவசாய நிலங்களில்‌ 242 கோடி மரங்களை நட ஈஷா திட்டமிட்டுள்ளது.

இதற்காக மரம்‌ சார்ந்த விவசாயத்தை காவேரி கூக்குரல்‌ முன்னெடுத்து வருகிறது. மரம்‌ சார்ந்த விவசாயம்‌ என்பது பலன்‌ தரக்கூடிய விலைமதிப்பு மிக்க மரங்களை விவசாய நிலங்களின்‌ வேலி மற்றும்‌ வரப்பு ஒரங்களில்‌ வளர்ப்பதாகும்‌. தேக்கு, மலைவேம்பு, கருமருது, வேங்கை, மஞ்சள்‌ கடம்பு, சந்தனம்‌, செஞ்சந்தனம்‌, குமிழ்‌, மகாகனி போன்ற மரங்கள்‌ இதற்கு உகந்தவை.



மேலும்‌, வாய்ப்புள்ளவர்கள்‌ நிலம்‌ முழுவதும்‌ டிம்பர்‌ மரங்கள்‌ நடவு செய்து இடையில்‌ ஊடுபயிர்‌ மற்றும்‌ மிளகு போன்ற நறுமணப்பயிர்களையும்‌ சாகுபடி செய்து தொடர்‌ வருமானம்‌ ஈட்டலாம்‌.

இதற்காக தமிழகம்‌ முழுவதும்‌ உள்ள 50 ஈஷா நர்சரிகள்‌ மூலம்‌ தரமான மரக்கன்றுகள்‌ 3 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. தற்போது மழைக்காலத்திற்கு தேவையான நாற்றுகள்‌ உற்பத்தி செய்யப்பட்டு விநியோகத்திற்கு தயாராக உள்ளது. மேலும்‌ மரம்‌ சார்ந்த விவசாயம்‌ குறித்த தொழில்நுட்ப ஆலோசனைகளை தமிழம்‌ முழுவதும்‌ உள்ள களப்பணியாளர்கள்‌ விவசாய நிலங்களுக்கு நேரடியாகச்‌ சென்று வழங்கி வருகிறார்கள்‌.



மரம்‌ சார்ந்த விவசாயம்‌ குறித்து கூடுதல்‌ தகவல்களுக்கு 8000980009 எண்ணை தொடர்பு கொள்ளலாம்‌.

இதுவரை ஈஷா சுமார்‌ 9 கோடி மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு விநியோகித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும்‌ தமிழகத்தில்‌ உள்ள விவசாய நிலங்களில்‌ ஒரு கோடி மரங்கள்‌ நடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில்‌ 1.10 கோடி மரங்கள்‌ நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 45 லட்சம்‌ மரங்கள்‌ நடப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...