கோவையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் சலசலப்பு

கோவை கொடிசியா அரங்கில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற கடனுதவி வழங்கும் விழாவில் கடன் கிடைக்காமல் வெளியேறிய நபரால் சலசலப்பு ஏற்பட்டது.


கோவை: 3,479 கோடி ரூபாய் மதிப்பில் சுய தொழில் செய்வோர், சிறு குறு தொழில் முனைவோர்கள், சாலையோர வியாபாரிகள், பட்டதாரிகள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடன் உதவிகளை வழங்கினார்.

கோவை கொடிசியா அரங்கில் கடனுதவி வழங்கும் விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு 3,479 கோடி ரூபாய் மதிப்பில் சுய தொழில் செய்வோர், சிறு குறு தொழில் முனைவோர்கள், சாலையோர வியாபாரிகள், பட்டதாரிகள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகளை வழங்கினார்.



இதனிடையே விழாவில் சதீஷ் என்பவர் தனக்கு லோன் கிடைக்கவில்லை என்று மனவேதனை பட்டு வெளியேறினார். அதனால் சற்று நேரம் சல சலப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து நிர்மலா சீத்தாராமன் அவரை மேடைக்கு அழைத்து பிரச்சனையை தெரிவிக்க கூறினார். அப்போது தனக்கு லோன் கிடைப்பதில் மிகவும் காலதாமதம் ஆகுவதாக கூறினார். உங்களுடைய ஆவணங்களை கொடுங்கள் உங்களுக்கு கண்டிப்பாக லோன் கிடைக்க ஏற்பாடு செய்துத் தரப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார். இதன்பின்னரே சற்று நேரம் நிலவிய சலசலப்பு அமைதியானது.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...