பொதுமக்கள் சரமாரி கேள்வி - சிறு கிணறு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஒத்திவைப்பு

திருப்பூர் மாவட்டம் சிறு கிணறு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சமை கூட்டத்தில் கிராம மக்கள் சரமாரி கேள்வி கேட்டதால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.


திருப்பூர்: டாஸ்மார்க் கடை அப்புறப்படுத்த ஏன் நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் கேள்வி கேட்டதால் கிராம சபை கூட்டத்தில் இருந்து பாதியிலேயே ஊராட்சி மன்றத் தலைவர் கிளம்பிச் சென்றார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குண்டடத்தை அடுத்துள்ள சிறு கிணறு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் செல்லமுத்து தலைமை தாங்கினார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டால் மட்டுமே கிராம சபை கூட்டம் நடத்தப்படும். இந்நிலையில் கிராமத்தில் உட்பட்டவர்களை கிராம சபை கூட்டத்திற்கு வந்திருக்கின்றனர்.

ஆனால், 50க்கும் மேற்பட்ட கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து நொச்சிப்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும் என்று தலைவர் செல்லமுத்துவிடும் பொதுமக்கள் சரமாரி கேள்வி எழுப்பினர்.

டாஸ்மார்க் கடை அப்புறப்படுத்த ஏன் நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி கேட்டனர். அதேபோன்று அடிப்படை வசதிகளான குடிநீர், சாக்கடை, தார் சாலை, தெரு விளக்கு, குப்பை அகற்றுவது உள்ளிட்ட பணிகளை செய்வதில் ஊராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டுவதாக புகார் தெரிவித்தனர்.

இதற்கு பதில் கூற முடியாத ஊராட்சி மன்ற தலைவர் செல்லமுத்து கூட்டத்திலிருந்து பாதியிலேயே இருந்து சென்றார். அதன் பின் அதிகாரிகள் போதிய அளவு கிராம மக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்காலதால் கிராம சபை கூட்டம் தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக தெரிவித்தனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...