உடுமலையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இணைந்து பழம் தரும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது

உடுமலையில் தனியார்-அரசு பள்ளிகள் மற்றும் ரோட்டரி அமைப்புடன் இணைந்து பழம் தரும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.


திருப்பூர்: மரக்கன்றுகள் நடும் விழாவில் கோவில் வளாகம் மற்றும் பூங்காவளாகங்களில் பயன் தரும் பழம் தரும் விதைகள், செடிகள் நடவு செய்யப்பட்டன.

உடுமலை எஸ்கேபி மேல்நிலைப்பள்ளி, உடுமலை விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி,உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,உடுமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி, வாசவி நகர் குடியிருப்போர் நல சங்கம் மற்றும் உடுமலை தேஜஸ் ரோட்டரி அமைப்புடன் இணைந்து நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமின் ஒரு நாள் நிகழ்வாக அனுஷம் நகர் விநாயகர் ஆலய வளாகம் மற்றும் பூங்காக்களில் பழம் தரும் மரக்கன்றுகள் நடவு செய்யும் விழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கு உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் டாக்டர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்க தலைவர் லோகேஸ்வரி மற்றும் செயலர் சம்பத்குமார் முன்னிலையில் உடுமலை எஸ்கேபி மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சேஷநாராயணன் வரவேற்று பேசினார்.

கோவில் வளாகம் மற்றும் பூங்காவளாகங்களில் பயன் தரும் பழம் தரும் விதைகள் மற்றும் செடிகள் நடவு செய்யப்பட்டன. இயற்கையை வணங்குவோம் என்ற தலைப்பில் பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சரவணன் உரை நிகழ்த்தினார்.

கோவில் வளாகம் முழுவதும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் விஜயலட்சுமி ஒருங்கிணைக்க உழவாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. உடுமலை ஸ்ரீ விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட திட்ட அலுவலர் சுமதி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஹம்சத் முகைதீன் நிகழ்வினை ஒருங்கிணைத்து மேற்கொண்டார்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...