மதிப்பெண்களை திருத்தி வழங்குவதில் பாரதியார் பல்கலைக்கழகம் தாமதம் செய்வதாக கூறி உடுமலை அரசு கலைக்கல்லூரியில் அரசியல் அறிவியல் பிரிவு வகுப்பில் பயின்று வரும் இருநூறுக்கு மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர்: கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதால், கல்லூரியில் பரபரப்பு நிலவுகிறது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக்கல்லூரியில் ஆயிரத்துக்கு அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் அரசியல் அறிவியல் பிரிவு வகுப்பில் பயின்று வரும் இருநூறுக்கு மேற்பட்ட மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் தவறாக உள்ளதாகவும், மதிப்பெண்களை திருத்தி வழங்குவதில் பாரதியார் பல்கலைக்கழகம் கடந்த மூன்று மாதத்துக்கு மேலாக தாமதம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து பல முறை கல்லூரி முதல்வரிடம் மாணவர்கள் தரப்பில் கேட்ட பொழுது எந்த ஒரு பதிலும் கிடைக்காத நிலையில் ஆத்திரமடைந்து தற்போது இருநூறுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவர்கள் கூறும் பொழுது, மூன்று மாத காலமாக மதிப்பெண்கள் திருத்தி வழங்குவதில் பாரதியார் பல்கலைக்கழகம் தொடர்ந்து தாமதம் செய்து வருகின்றது. எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக்கல்லூரியில் ஆயிரத்துக்கு அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் அரசியல் அறிவியல் பிரிவு வகுப்பில் பயின்று வரும் இருநூறுக்கு மேற்பட்ட மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் தவறாக உள்ளதாகவும், மதிப்பெண்களை திருத்தி வழங்குவதில் பாரதியார் பல்கலைக்கழகம் கடந்த மூன்று மாதத்துக்கு மேலாக தாமதம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து பல முறை கல்லூரி முதல்வரிடம் மாணவர்கள் தரப்பில் கேட்ட பொழுது எந்த ஒரு பதிலும் கிடைக்காத நிலையில் ஆத்திரமடைந்து தற்போது இருநூறுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாணவர்கள் கூறும் பொழுது, மூன்று மாத காலமாக மதிப்பெண்கள் திருத்தி வழங்குவதில் பாரதியார் பல்கலைக்கழகம் தொடர்ந்து தாமதம் செய்து வருகின்றது. எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.