குண்டடத்தில் 3 வீடுகளின் பூட்டை உடைத்து திருட முயற்சி - எதுவும் சிக்காததால் திருடர்கள் ஏமாற்றம்

குண்டடம் அருகே அடுத்தடுத்து மூன்று வீடுகளில் திருடச் சென்ற மர்ம நபர்கள் வீடுகளில் எதுவும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.


திருப்பூர்: ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் திருட முயன்ற மர்ம நபர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குண்டடத்தை அடுத்துள்ள சூரியநல்லூர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 75), விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை தோட்டத்திற்கு சென்றுவிட்டு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. உள்ளே பணம், நகை ஏதும் வைக்கப்படாததால் ஏமாற்றத்துடன் மர்ம ஆசாமிகள் தப்பிச் சென்றிருந்தனர்.

இதே போல் சின்னாரிபாளையம் வேலுசாமி வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றனர். அங்கும் ஏதும் கிடைக்காத நிலையில் உப்பாறு அணை சுண்டமந்தை அருகில் உள்ள நடராஜ் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற நபர்கள் பீரோவின் பூட்டையும் உடைத்து அதிலிருந்த துணிமணிகளை எடுத்து வீட்டின் உள் பகுதியில் வீசியிருந்தனர். அங்கும் பணம், நகைகள் ஏதும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் சென்றுவிட்டனர்.

இது பற்றிய தகவலின்பேரில் அங்கு சென்ற போலீசார் அந்தந்தப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...