வால்பாறை கலை கல்லூரியில் போக்குவரத்து விதிமுறைகளை பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்

வால்பாறை கலை கல்லூரியில் போக்குவரத்து விதிமுறைகள் பற்றி விழிப்புணர்வு கருத்தரங்க கூட்டம் போக்குவரத்து வட்டார அலுவலக போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது.


கோவை: வாகனங்களை ஓட்டும் பொழுது வாகனத்திற்கு உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் உட்பட சாலை போக்குவரத்து விதிகள் பற்றி கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த அரசு கலைக் கல்லூரியில் சுமார் 2000திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

சாலை விதிமுறைகளை கடைபிடிப்பதற்கு போக்குவரத்து வட்டார அலுவலக போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் தலைமையில் கல்லூரியில் சாலை விதிமுறைகளை பற்றி விழிப்புணர்வு கருத்து அரங்க கூட்டம் நடைபெற்றது.

இதில் மாணவ,மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். சாலையில் வாகனங்களை ஓட்டும் பொழுது வாகனத்திற்கு உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். 18 வயதிற்கு மேல் நிரம்பியவர் வாகனம் ஓட்டுநர் உரிமை வைத்திருக்க வேண்டும். சாலை விதியில் விதிகளை கடைபிடிக்க வேண்டும். இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும் பொழுது கட்டாய தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும். நான்கு சக்கர வாகனத்தில் செல்லும் பொழுது சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும். இரண்டு சக்கர வாகனத்தில் இரண்டு பேருக்கு மேல் ஏற்றக்கூடாது.

வேக கட்டுப்பாடு அவசியம். ஒலி எழுப்பும் இடத்தில் ஒலி எழுப்ப வேண்டும். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டக்கூடாது. வாகனங்களை விளையாட்டாக ரேஸ் போன்றவை வைக்கக்கூடாது. இவைகள் அனைத்தும் உயிருக்கு கேடாக விளைவிக்கும் போன்ற விதிமுறைகளை பற்றி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு மேற்கொண்டனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...