கோவையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கோவையில் நடைபெற்று வரும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாமிற்கு பல்வேறு இடங்களில் இருந்து பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளை அழைத்து வந்து மருத்துவ சிகிச்சை பெற்று செல்கின்றனர்.


கோவை: மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் டாடாபாத் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று நடைபெறுகிறது.



ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கோவை நகர வள மையம் சார்பில் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் டாடாபாத் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று நடைபெறுகிறது.



இம்முகாமில் உடல் இயக்க குறைபாடு, கண் பார்வை குறைபாடு, செவித்திறன் குறைபாடு, 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான மன வளர்ச்சி குறைபாடு, மூளை வளர்ச்சி குறைபாடு ஆகியவற்றிற்கு மருத்துவ சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் அளிக்கப்படுகின்றன.



தேவைப்படும் குழந்தைகளுக்கு மருந்துகளும் வழங்கப்படுகின்றன.



மேலும் இம்முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பதிவு, ரயில் மற்றும் பேருந்து பயண சலுகை படிவங்களும் வழங்கப்படுகின்றன.

52 பேருக்கு உதவி உபகரணங்களும், 25 பேருக்கு காதொலி கருவியும் வழங்கப்பட உள்ளது. இன்று நடைபெறும் இம்முகாமிற்கு கோவையில் பல்வேறு இடங்களில் இருந்து பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளை அழைத்து வந்து மருத்துவ சிகிச்சைகளையும், ஆலோசனைகளையும் பெற்று செல்கின்றனர். இங்கு வருபவர்களுக்கு தேவையான குடிநீர் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு சிற்றுண்டிகள் வழங்கப்படுகிறது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...