பணி நிரந்தம் செய்ய வேண்டும் என்று சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர்களை காவல்துறையினர் துன்புறுத்தி மனிதாபிமானமற்ற முறையில் கைது செய்துள்ளதாக தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
சென்னை டிபிஐ வளாகத்தில், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 11 நாட்களாக பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த ஆசிரியர்கள் கைது நடவடிக்கை கண்டித்தும், பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு முன்பு தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், சென்னையில் பகுதி நேர ஆசிரியர்களை காவல்துறை துன்புறுத்தி மனிதாபிமானமற்ற முறையில் கைது செய்ததை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்க மாநில செயலாளர் ராஜா தேவகாந்த் தலைமை வகித்தார்.
இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் தியாகராஜன், ஆனந்தகுமார், ஆனந்தராஜ், சுதாகர், விக்டோரியா, அருணா, கிருத்திகா உள்பட 250 மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை டிபிஐ வளாகத்தில், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 11 நாட்களாக பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த ஆசிரியர்கள் கைது நடவடிக்கை கண்டித்தும், பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு முன்பு தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், சென்னையில் பகுதி நேர ஆசிரியர்களை காவல்துறை துன்புறுத்தி மனிதாபிமானமற்ற முறையில் கைது செய்ததை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்க மாநில செயலாளர் ராஜா தேவகாந்த் தலைமை வகித்தார்.
இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் தியாகராஜன், ஆனந்தகுமார், ஆனந்தராஜ், சுதாகர், விக்டோரியா, அருணா, கிருத்திகா உள்பட 250 மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.