கடந்த ஒருவாரத்திற்கு முன்பு கோவை, சரவணம்பட்டி சாலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் அப்பகுதி பொதுமக்களால் மீட்கப்பட்டு ஈரநெஞ்சம் அறக்கட்டளையில் சேர்க்கப்பட்டார்.

அப்பெண்ணை தொடர்ந்து பராமரித்து வந்த ஈரநெஞ்சம் அறக்கட்டளையினர் மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவற்றை அளித்துவந்தனர். தொடர்ந்து அப்பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் புலி வளம் என்னும் பகுதியை தெரிவித்துள்ளார். அதன்படி புலிவளம் குறித்து விசாரணை மேற்கொண்ட அறக்கட்டளையினர் அந்தப்பகுதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது என கண்டறிந்தனர்.
அதனைத்தொடர்ந்து, திருவாரூர் காவல்நிலையத்திற்கு தொடர்புகொண்டு தெரிவித்ததைத் தொடர்ந்து, காணாமல் போனவர் பட்டியல் உள்ளிட்டவற்றை சோதனை செய்த காவல்துறையினர், அப்பெண் சத்யா என்பவரது தாய் ராஜேஸ்வரி என்றும், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கண்டறிந்தனர்.

இதைத்தொடர்ந்து, ஈரநெஞ்சம் அறக்கட்டளைக்கு வந்த சத்யா, நான்கு மாதங்களுக்குப் பின் தனது தாயைக்கண்டு நெகிழ்ச்சியுற்றார். தொடர்ந்து தாயும், மகளும் கட்டித்தளுவி மகிழ்ச்சியில் அழுத காட்சி அங்கிருந்தோரை நெகிழ வைத்தது.
இதுகுறித்து சத்யா தெரிவிக்கையில், நான்கு மாதங்களுக்கு முன்பு எனது தாய் திருவாரூரில் காணாமல் போனார். நாங்கள் பல்வேறு பகுதியில் அவரை தேடினோம். எங்கும் காணவில்லை. தற்போது கோவையில் ஈரநெஞ்சம் அறக்கட்டளையால் எனது தாய் மீண்டும் என்னுடன் இணைந்துள்ளார். இந்த மகிழ்ச்சியை விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை' என தெரிவித்தார்.
இதனையடுத்து, ராஜேஸ்வரியின் சில ஆவணங்களை சரிபார்த்து உறுதிசெய்த ஈரநெஞ்சம் அறக்கட்டளையினர், மனநலம் பாதிக்கப்பட்ட தாயின் மீது கூடுதல் கவனம் செலுத்தி பாதுகாக்குமாறு அறிவுரைகூறி மகள் சத்யாவுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

அப்பெண்ணை தொடர்ந்து பராமரித்து வந்த ஈரநெஞ்சம் அறக்கட்டளையினர் மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவற்றை அளித்துவந்தனர். தொடர்ந்து அப்பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் புலி வளம் என்னும் பகுதியை தெரிவித்துள்ளார். அதன்படி புலிவளம் குறித்து விசாரணை மேற்கொண்ட அறக்கட்டளையினர் அந்தப்பகுதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது என கண்டறிந்தனர்.
அதனைத்தொடர்ந்து, திருவாரூர் காவல்நிலையத்திற்கு தொடர்புகொண்டு தெரிவித்ததைத் தொடர்ந்து, காணாமல் போனவர் பட்டியல் உள்ளிட்டவற்றை சோதனை செய்த காவல்துறையினர், அப்பெண் சத்யா என்பவரது தாய் ராஜேஸ்வரி என்றும், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கண்டறிந்தனர்.

இதைத்தொடர்ந்து, ஈரநெஞ்சம் அறக்கட்டளைக்கு வந்த சத்யா, நான்கு மாதங்களுக்குப் பின் தனது தாயைக்கண்டு நெகிழ்ச்சியுற்றார். தொடர்ந்து தாயும், மகளும் கட்டித்தளுவி மகிழ்ச்சியில் அழுத காட்சி அங்கிருந்தோரை நெகிழ வைத்தது.
இதுகுறித்து சத்யா தெரிவிக்கையில், நான்கு மாதங்களுக்கு முன்பு எனது தாய் திருவாரூரில் காணாமல் போனார். நாங்கள் பல்வேறு பகுதியில் அவரை தேடினோம். எங்கும் காணவில்லை. தற்போது கோவையில் ஈரநெஞ்சம் அறக்கட்டளையால் எனது தாய் மீண்டும் என்னுடன் இணைந்துள்ளார். இந்த மகிழ்ச்சியை விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை' என தெரிவித்தார்.
இதனையடுத்து, ராஜேஸ்வரியின் சில ஆவணங்களை சரிபார்த்து உறுதிசெய்த ஈரநெஞ்சம் அறக்கட்டளையினர், மனநலம் பாதிக்கப்பட்ட தாயின் மீது கூடுதல் கவனம் செலுத்தி பாதுகாக்குமாறு அறிவுரைகூறி மகள் சத்யாவுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.