‌தாராபுரத்தில் ஒற்றுமை மேடை கூட்டம் - மத அடிப்படையில் மக்களை பாஜக பிளவுப்படுத்துவதாக புகார்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஒருமைப்பாடு காக்கும் வகையில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கலந்தாய்வுக் கூட்டம் பூங்கா சாலையில் உள்ள தமிழ் கலை மன்றத்தில் நடைபெற்றது.


திருப்பூர்: உணவு, உடை, காதல், மதம் என்னும் மக்களின் தனிப்பட்ட உரிமைகளில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் உத்தரவு போட்டு வருவதாக தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கலந்தாய்வுக் கூட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஒருமைப்பாடு காக்கும் வகையில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கலந்தாய்வுக் கூட்டம் பூங்கா சாலையில் உள்ள தமிழ் கலை மன்றத்தில் நடைபெற்றது.



இந்த கலந்தாய்வுக் கூட்டம் திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் தெனரசு தலைமையில் நடைபெற்றது. மக்கள் ஒற்றுமை மேடை கலந்தாய்வு கூடத்தில் அவர் பேசியபோது,

உணவு, உடை, காதல், மதம் என்னும் மக்களின் தனிப்பட்ட உரிமைகளில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் உத்தரவு போட்டு வருகின்றனர். அதன் நோக்கம் சிறுபான்மை மக்கள் இரண்டாம் தர குடிமக்களே என நிறுவுவதற்குதான். அப்படி மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் அடைய துடிப்பதாகும்.



எனவே மக்கள் ஒன்றிணைந்து இதுபோன்று பிரித்தாலும் சூழ்ச்சியில் ஈடுபடும் அவர்களை அடையாளம் கண்டு ஒதுக்க வேண்டும் என பேசினர். இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன், வழக்கறிஞர் திருப்பூர் மோகன், தாராபுரம் ஒருங்கிணைப்பாளர் கம்யூனிஸ்ட் கனகராஜ், விடுதலை கட்சியின் மாவட்ட செயலாளர் ஓவியர் மின்னல், தி.க வழக்கறிஞர் சக்திவேல், திராவிட கழகத்தைச் சேர்ந்த முனீஸ்வரன்,சண்முகம், படிப்பகம் ராஜாமணி, தீர்க்கதிர் இராசா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...