கோவை உக்கடத்தில் இருந்து சின்ன தடாகம் செல்லும் தனியார் பேருந்து தட எண்- 85 வாகனத்தின் உள்ளே அதிக சத்தத்துடன் சினிமா பாடல் ஒலிபரப்பப்பட்டு பேருந்து சென்று கொண்டிருந்தது.

ரயில் நிலையம் அடுத்து பேருந்து முன்னே சென்று கொண்டிருந்தபோது பின்னால் 108 அரசு ஆம்புலன்ஸ் சைரன் ஒலித்தபடியே வந்தது.
அதிக சத்தத்துடன் பாடல் பேருந்தின் உள்ளே ஒலித்துக் கொண்டிருந்ததால் வாகன ஓட்டுனர் சுகதேவ் இதுபற்றி தெரியாமல் அவசர ஊர்திக்கு வழி விடாமல் பேருந்தை இயக்கிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் ரயில் நிலையம் அருகில் பணியில் இருந்த போக்குவரத்து ஆய்வாளர் பெரியசாமி தனது இரு சக்கர வாகனத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பேருந்தை தடுத்து நிறுத்தி விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டியதற்காக 1000 ரூபாய் அபராதம் விதித்தார்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதே போல் சுங்கம் பகுதியில் தனியார் பேருந்து போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ரயில் நிலையம் அடுத்து பேருந்து முன்னே சென்று கொண்டிருந்தபோது பின்னால் 108 அரசு ஆம்புலன்ஸ் சைரன் ஒலித்தபடியே வந்தது.
அதிக சத்தத்துடன் பாடல் பேருந்தின் உள்ளே ஒலித்துக் கொண்டிருந்ததால் வாகன ஓட்டுனர் சுகதேவ் இதுபற்றி தெரியாமல் அவசர ஊர்திக்கு வழி விடாமல் பேருந்தை இயக்கிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் ரயில் நிலையம் அருகில் பணியில் இருந்த போக்குவரத்து ஆய்வாளர் பெரியசாமி தனது இரு சக்கர வாகனத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பேருந்தை தடுத்து நிறுத்தி விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டியதற்காக 1000 ரூபாய் அபராதம் விதித்தார்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதே போல் சுங்கம் பகுதியில் தனியார் பேருந்து போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்கு அபராதம் விதிக்கப்பட்டது.