108 அவசர ஊர்திக்கு வழி விடாத தனியார் பேருந்திற்கு அபராதம் விதித்த போக்குவரத்து காவலர்கள்

கோவை உக்கடத்தில் இருந்து சின்ன தடாகம் செல்லும் தனியார் பேருந்து தட எண்- 85 வாகனத்தின் உள்ளே அதிக சத்தத்துடன் சினிமா பாடல் ஒலிபரப்பப்பட்டு பேருந்து சென்று கொண்டிருந்தது.



ரயில் நிலையம் அடுத்து பேருந்து முன்னே சென்று கொண்டிருந்தபோது பின்னால் 108 அரசு ஆம்புலன்ஸ் சைரன் ஒலித்தபடியே வந்தது.

அதிக சத்தத்துடன் பாடல் பேருந்தின் உள்ளே ஒலித்துக் கொண்டிருந்ததால் வாகன ஓட்டுனர் சுகதேவ் இதுபற்றி தெரியாமல் அவசர ஊர்திக்கு வழி விடாமல் பேருந்தை இயக்கிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் ரயில் நிலையம் அருகில் பணியில் இருந்த போக்குவரத்து ஆய்வாளர் பெரியசாமி தனது இரு சக்கர வாகனத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பேருந்தை தடுத்து நிறுத்தி விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டியதற்காக 1000 ரூபாய் அபராதம் விதித்தார்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதே போல் சுங்கம் பகுதியில் தனியார் பேருந்து போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...