கறிக்கோழி விற்பனை சரிவடைவதால், கொள்முதல் விலை சரியும் பண்ணையாளர் அச்சம்

புரட்டாசி மாதம் என்பதால் கறிக்கோழி விலை சரிந்து வருவதால் கொள்முதல் விலை விழ்ச்சி அடையும் ஆபத்து இருப்பதாக கோவை, திருப்பூர், ஈரோடு கறிக்கோழி பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்


கோவை: கறிக்கோழி விற்பனை சரிவு கோழி பண்ணையாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

கோவை, ஈரோடு, திண்டுக்கல் மாவட்டங்களில், கறிக்கோழி பண்ணைகள் மூலம், வாரம் ஒரு கோடி கோழி குஞ்சுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு செயலாளர் சுவாதி கண்ணன் கூறியதாவது:அண்டை மாநிலமான கேரளாவில் மட்டும், வாரம், 50 லட்சம் கோழிக்குஞ்சுகள் விற்பனையாகி வருகின்றன.

கேரளாவில், தொடர் மழை காரணமாக, 20 சதவீதம் வரை கறிக்கோழி விற்பனை சரிவடைந்து வருகிறது. இதுதவிர, விழாக்கள், பண்டிகைகள் காரணமாகவும் விற்பனை குறைந்துள்ளது. தமிழகத்தில், புரட்டாசி மாதம் என்பதால், அசைவம் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதுவும் விற்பனை குறைவதற்கான காரணமாக உள்ளது.தற்போது, கொள்முதல் விலை, கிலோ 108 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விற்பனை குறைந்துள்ளதால், அதற்கு ஏற்ப உற்பத்தியும் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. விற்பனை சரிவு காரணமாக, வரும் நாட்களில் கொள்முதல்விலையும் குறைய வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.தற்போதுள்ள தீவன விலை, ஆள் கூலி, வண்டி வாடகை, பராமரிப்பு செலவு உள்ளிட்டவற்றின் அடிப்படையில், கறிக்கோழிகளின் அடக்க விலை, 100 ரூபாய் என கணக்கிடப்படுகிறது. கொள்முதல் விலை மேலும் குறைந்தால், பண்ணையாளர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என அவர் அச்சம் தெரிவித்தார்

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...