மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் - கோவையில் பிங்க் நிறத்தில் ஒளிர்ந்த ரேஸ்கோர்ஸ் மீடியா டவர்

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு கோவையில் கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை சார்பில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ரேஸ் கோர்ஸ் பகுதியில் தாமஸ் பார்க் முழுவதும் பிங்க் வண்ண விளக்குகள் ஒளிரவிடப்பட்டன


கோவை: நோயாளிகள் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சைக்கு வந்தால் மார்பக புற்று நோயை குணப்படுத்த முடியும் என விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மருத்துவர்கள் நம்மிக்கை தெரிவித்தனர்.

நகர்புற பெண்களுக்கு பெரும் பாதிப்பாக மாறி வருவது மார்பகபுற்றுநோய். இந்த நிலையில் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக உலகம் முழுவதும் கடைபிடிக்கும் நிலையில், கோவையில் கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை சார்பில், இந்த மாதத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், மார்பக புற்று நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றன.



பொதுமக்களிடையே, குறிப்பாக பெண்களிடம் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன், ரேஸ் கோர்ஸ் பகுதியில் தாமஸ் பார்க் முழுவதும் பிங்க் வண்ண விளக்குகள் ஒளிரவிடப்பட்டன.

ஆண்கள், பெண்கள், பெரியவர்கள், சிறுவர்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்த நிலையில், மீடியா டவரில் உள்ள திரையில் பிங்க் நிறத்தில் விழிப்புணர்வு படங்கள் ஒளிபரப்பட்டன. மார்பக புற்றுநோயைக் குறிக்கும் வகையில், நோயாளிகளின் மனதில் நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக பிங்க் நிறம் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.

பிங்க் வண்ண ரிப்பன் உலகம் முழுவதும் மார்பக புற்றுநோயின் அடையாளச் சின்னமாக விளங்குகிறது. மார்பக புற்றுநோயை வெற்றிகொள்வதில் எடுத்துவரும் முயற்சிகளுக்கும் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களுக்கும் ஆதரவு தெரிவிக்கும் அடையாளமாகவும் பிங்க் வண்ணம் இருக்கிறது. உலக சுகாதார நிறுவனம் அக்டோபர் மாதத்தை பிங்க் மாதமாக ( பிங்க் அக்டோபர்) அறிவித்துள்ளது.



அதன் அடிப்படையில் நிகழ்ச்சியில் பிங்க் நிறத்தில் அனைத்தும் பயன்படுத்தி விழிப்புணர்வு செய்யப்பட்டன. மார்பக புற்று நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி, கமிஷனர் பிரதாப், துணை ஆணையர் சந்தீஸ், மேற்கு மண்டல ஐஜி, துணை மேயர், மருத்துவர்கள், செவிலியர்கள், தன்னார்வலர்கள், ஆண்கள், பெண்கள், பெரியவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பெருந்திரையில் கையெழுத்திட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதுகுறித்து பேசிய மருத்துவர்கள், மார்பக புற்று நோய் விழிப்புணர்வு இல்லாததனால், குணப்படுத்தக்கூடிய நோய்க்கு முறையான சிகிச்சை இல்லாததனால் பெண்கள் பரிதாமபாக உயிரிழக்கின்றனர். உரிய விழிப்புணர்வு பெண்களிடம் ஏற்படுத்தி மார்பக புற்றுநோய் பாதிப்பிலிருந்து காக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டன.

நோயாளிகள் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சைக்கு வந்தால் இந்த நோய்க்கு தகுந்த சிகிச்சைகள் அளித்து குணப்படுத்திவிடமுடியும். வருடா வருடம் 5 இலட்சத்திற்கும் அதிகமான பெண்கள் மார்பக புற்றுநோயால் இறக்கிறார்கள். நம்பிக்கை அளிக்கும் செய்தி என்னவென்றால், ஆரம்ப நிலை புற்றுநோய்களில் 90 சதம் குணப்படுத்திவிடக் கூடியவை.

பாதிப்பு அதிகாமாக உள்ள அயல்நாடுகளில் ஆரம்பத்திலேயே கண்டறிவதனால் இறப்பு பெருமளவில் தடுக்கப்படுகின்றன. ஆனால் நம் நாட்டில் பாதிப்பு குறைவான நிலையில், போதுமான விழிப்புணர்வின்றி பெண்கள் பரிதாபமாக பலியாகின்றனர். பெண்கள் உரிய பரிசோதனை மேற்கொண்டு ஆரோக்கியாமாக இருக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...