கோவை மாநகராட்சியில் குடிநீர் விநியோகம் குறித்து மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் கோவை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோக நேரத்தினை குறைத்து ஆறு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், "கோவை மாநகராட்சியிலுள்ள அனைத்து வார்டு பகுதிகளிலும் தற்பொழுது 10 முதல் 12 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வரும் நேரத்தினை குறைத்து 6 நாட்களுக்கு ஒருமுறையும் மற்றும் அதேபோல குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளில் தற்பொழுது 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வரும் நேரத்தினை குறைத்து 6 நாட்களுக்கு ஒருமுறையும் குடிநீர் விநியோகம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு குடிநீர் விநியோகப் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், இக்கூட்டத்தில் குறிச்சி (ஆழியார்) நீரேற்றுமிடத்தில் உள்ள பழுதடைந்துள்ள குடிநீரின் அளவு மானிக்கு பதிலாக வேறு குடிநீர் அளவு மானியை குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், நிதியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 64 பணிகளில் 24 பணிகள் முடிவடைந்துள்ளன.

நடைபெற்றுவரும் 40 பணிகளை 10 நாட்களுக்குள் முடிக்குமாறு நகரப்பொறியாளர் மற்றும் செயற்பொறியாளர்களுக்கு அறிவுறுத்தியும், வணிகவளாகங்கள் மற்றும் குடியிருப்புகளில் உள்ள அங்கீகரிக்கப்படாத குடிநீர் இணைப்புகளைக் கண்டறிந்து உடனடியாக துண்டிக்க நடவடிக்கை எடுக்குமாறும், லங்கா கார்னர், காளீஸ்வரா மில், கிக்கானி பிரிட்ஜ், வடகோவை மற்றும் அவினாசி மேம்பாலம் ஆகிய இடங்களில் குறிப்பிட்ட கால இடைவெளியில் தூர்வாரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மண்டல அளவில் தாழ்வான இடங்களை கண்டறிந்து அப்பகுதிகளில் தூர்வாரும் பணியினை மேற்கொண்டு மழைகாலங்களில் மழைநீர் தேங்காவண்ணம் நடவடிக்கை எடுக்குமாறும், புதிய பாதாளசாக்கடை இணைப்பு கொடுப்பதற்கான விண்ணப்பங்களை பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கவும், பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களின் மீது உடனடி நடவடிக்கை எடுத்து வைப்புத்தொகையினை வசூல் செய்யவும் நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மண்டல உதவி ஆணையாளர்கள், பொறியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. 

இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகரப் பொறியாளர் (பொ) பார்வதி, செயற்பொறியாளர்கள் ஞானவேல், சரவணக்குமார், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் குடிநீர் விநியோகப் பொறியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...