உடுமலையில் வானவியல் சார் பயிற்சி பட்டறை - சூரிய குடும்பம் பற்றி மாணவர்களுக்கு விளக்கம்

உடுமலையில் நடைபெற்ற வானவியல் சார் பயிற்சி பட்டறையில், சூரிய குடும்பம், கோள்கள், சூரியனை சுற்றி வரும் விதம் பற்றி விளக்கமளிக்கப்பட்டது.


திருப்பூர்: வானவியல் சார் பயிற்சி பட்டறையில். சர்வதேச விண்வெளி வார விழா பற்றியும், வன உயிரின வார விழா பற்றியும் பள்ளி கல்லூரி மாணவர்களிடம் எடுத்துக்கூறப்பட்டது.

உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம் ,உடுமலை சுற்றுச்சூழல் சங்கம் சார்பில் சர்வதேச விண்வெளி வார விழா அக்டோபர் 4 முதல் 10 வரை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.



அதன் அடிப்படையில் அக்டோபர் 7 அன்று அந்தியூர் கமலம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான வானவியல் சார் பயிற்சி பட்டறை நடைபெற்றது. இதில் சூரிய குடும்பம், கோள்கள், சூரியனை சுற்றி வரும் விதம், நிலவின் முகங்கள், நட்சத்திர தொகுதிகளை எளிதில் அடையாளம் காணுதல், சூரிய கடிகாரம், பந்து கண்ணாடி மாயக்கண்ணாடி, ஓரிடத்தில் உள்ளூர் நண்பகல் நேரத்தை கணக்கிடுதல், சரியான திசைகளை சூரியனின் நிழலை வைத்து கணக்கிடுதல் என்பது போன்ற பல்வேறு வானவியல் சார் கருத்துக்களை எளிமையாக தெரிந்து கொள்வதற்கான எளிய பொருட்களைக் கொண்டு அறிவியல் சார் கருவிகளை மாணவர்கள் தாங்களாகவே செய்ய வழி காட்டப்பட்டது.



அது சார்ந்த வானவியல் சார் கருத்துக்களை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான், ஜிவிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவியும் கருத்தாளருமான ஹரிணி ஆகியோர் விளக்கிக் கூறினர். கமலம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் பிருந்தா தலைமை வகித்தார். உடுமலை உடுமலை சுற்றுச்சூழல் சங்க தலைவர் மணி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சர்வதேச விண்வெளி வார விழா பற்றியும், வன உயிரின வார விழா பற்றியும் பள்ளி கல்லூரி மாணவர்களிடம் எடுத்துக் கூறினார்.

குறிப்பாக ஆனைமலை புலிகள் காப்பகத்தை பாதுகாக்க வேண்டியது நமது முக்கிய கடமை என்பதையும் வன விலங்குகளை பாதுகாக்க வேண்டும் என்பதையும் மிகத் தெளிவாக எடுத்துக் கூறினார். நிறைவாக கல்லூரி அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கீதாமணி நன்றி கூறினார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...