கோவை ரயில் நிலையத்தில் இருந்து கேரளாவிற்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக ரயில்வே காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ரயில் நிலையத்திற்கு சென்ற காவல்துறையினர் ஹைதராபாத்திலிருந்து கோவை வழியாக கேரளாவிற்கு செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி சோதனையிட்டனர்.
அப்போது, ரயில் பெட்டியில் சந்தேகத்திற்கிடமாக மூன்று பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, அதை சோதனையிட்டபோது 6 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து, வழக்கு பதிவு செய்த கோவை ரயில்வே காவல்துறையினர் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட மர்மநபரை தேடிவருகின்றனர்.
அப்போது, ரயில் பெட்டியில் சந்தேகத்திற்கிடமாக மூன்று பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, அதை சோதனையிட்டபோது 6 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து, வழக்கு பதிவு செய்த கோவை ரயில்வே காவல்துறையினர் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட மர்மநபரை தேடிவருகின்றனர்.